Tuesday 17 December 2013

சென்னை Traffic

போதுமடா சாமி ! என்று சென்னையை விட்டு விலகி வருடங்கள் பல உருண்டோடினாலும், அதன் பந்தத்தை விட்டு விடாமல், நன்றி மறவாமைக்காக சில சமயங்களில்  வர வேண்டியிருக்கிறது.

இம்முறை "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று உறவினர்களின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வந்தும்  இங்கு வரவில்லை, அங்கு வரவில்லை என்று ஒரே குற்றக்கணை பாய்வதினால்தான்  இந்த புலம்பல்.

சரியாக எனது தெலுங்கானா நண்பன்  Manu Ramidi-ம், அமாம் சுந்தர்சென்னையில் ஒரு நாளைக்கு ஒரு இடம்தான் செல்ல முடியும் என்று சொல்கிறான்!

திரும்பவும் பட்டிக்காட்டான் பட்டிணத்தை பார்த்தது போல, ஏம்பா! எதுக்குப்பா இவ்வளவு Traffic என்று கேட்கத்தான் தோன்றுகிறது. நான் சென்னையை விட்டு ஓடியதற்கு முதல் காரணமே இதுதான். எங்கு பார்த்தாலும் விண்ணை மறைத்து மேம்பாலங்கள் முடிந்தும், முடிவடையா நிலையிலும் போக்குவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.எத்தனை பாலம் போட்டாலும், Flying Train விட்டாலும் பெருகிவரும்  Population-தான் அடிப்படைக் காரணம். போகிற போக்கைப் பார்த்தால் தாம்பரத்தில் இருப்பவர்கள் திங்கள் கிழமை, பெரம்பூரில் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை, கும்மிடிபூண்டியில் இருப்பவர்கள் புதன் கிழமைதான் நகரத்தினுள் வரவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.

நான் வேண்டுமானால் அடுத்தமுறை திருமலாவிற்கு வருவது போல் முன்பதிவு செய்து விட்டு வருகிறேன்.


சென்னையில் இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையான 
Fortress-க்குள் தான் இருக்கின்றனர்.

Monday 16 December 2013


சீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன்.


சைனீஸ் Aggression at LOC போலவே உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுடைய தேடுதலுக்கு உட்பட்டு, நான் வாங்கி என் கைகளுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று எனக்கு தெரியாது.

என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்தேறிய, சீனாவின் Diplomatic  பாஷையில் June Fourth Incident என்று அழைக்கப்படும்-1989-ம் வருடம் Tinanmen Square-ல் நடந்த மாணவர் புரட்சியை அவர்கள் அடக்கிய விதம், நேரு காலத்தில் நம் இந்தியாவை ஏமாற்றிய விதம், குங் பூ படங்களில் அவர்கள்  அடித்துக் கொள்ளும் அடிப்படை காரணங்கள், அவர்களுடைய  அந்த Glee சிரிப்பு,எப்போதாவது நண்பர்களுடன் Chinese உணவகங்களில், சுத்த சைவனாகிய நான் அந்த வாசனைகளை பொறுத்துக் கொண்டதும்அவர்களுடைய மர்மமான தற்போதைய பொருளாதாரமும், உலக சந்தைகளில் உந்தி தள்ளப்படும் உணவு வகைகள், குழந்தைகள் பாவிக்கும் விளையாட்டுப் பொருள்களின் தரம் ஆகியவற்றில் உள்ள சந்தேகங்கள், அங்கு தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமெல்லாம் என்னுடைய மனதில் ஏற்படுத்தியிருந்த ஒரு விதமான அபிப்பிராயத்தை உங்களுடைய எழுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட களம், கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாகியுள்ளது என்றால் அது மிகையில்லை.

எல்லா நாடுகளிலுமே அந்த நாட்டின் அரசியல், அந்த நாட்டு மக்களின் மேல் நமக்கு ஒரு தவறான பரிமாணங்களைத்தான் கொடுக்கிறது.

உங்களுடைய அணுகுதல் ஒரு பயணக் கட்டுரையாக இல்லாமல், வாழ்வியல் சார்ந்ததாக இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.

குறிப்பாக உங்களுடைய அப்பார்ட்மெண்ட் தேர்வு, தண்ணீர், மின்சாரம் அவைகளுக்கான Prepaid முறை, ஆயுள் நீண்டவர்களின் வாழ்வு முறை, வீட்டு வேலைக்காரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு,விடுமுறையை தேர்ந்தெடுக்கும் முறை, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்து தாய் தந்தையரின் உணர்வுகளுக்கும்  மதிப்பளித்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது, மற்ற  நாட்டினரிடமிருந்து சீனர்களின்  உடல்மொழி வேறுபடுதல்,பூங்காவில் இலவச உந்து வண்டியில் முதியவர்கள் கூட ஏறத் தயங்கும் சுய மரியாதை-சுய உழைப்பு, உங்கள் குழந்தைகளின் பள்ளியை கண்டுபிடிப்பதில் நீங்கள் அடைந்த சிரமம், நீங்கள் சீனர்களின் திருமணத்தில் பரிசளிப்பதில் கடந்த சங்கடம், Ben-ன் தோழமை இவை யாவையும் மிகத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்து எழுதிஇருக்கிறீர்கள்.

நான் சீனாவை சுற்றுலாவின் மூலமாக தெரிந்து கொள்வதைவிட உங்களுடைய பதிவின் மூலமாக அதிகமாக  அறிந்து கொண்டேன் என்பது நிதர்சனம். உங்களுடைய நேர்த்தியான  பகிர்தல் என்னுடைய பரதேசி வாழ்க்கையை மீண்டும் துவக்கத் தூண்டுகிறது. .நிறைய நண்பர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுலா தலங்களை தவிர, மற்றவை பற்றி விவரிக்க இயலாததை கண்டிருக்கிறேன்.

சீனர்களுடைய பெளத்த மடாலயங்கள் பற்றி நீங்கள் நேராகப் பார்த்து விரிவாக எழுதினால்,--"ஏழாம் அறிவு" திரைப்படத்தில் முழுமையாக தெரிவிக்கத் தவறிய-போதி தர்மரின்-சீனாவுடனான தொடர்பு பற்றி நீங்கள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சாதரணமாக ஒரு புத்தகத்தை படித்தவுடன்,நம் மீதான அதன் பாதிப்பை பணிச் சுமை என்ற ஒரு போர்வையில் எழுதாம லும், , இந்தியர்கள் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நிறைய பாராட்டுவார்கள் என்று நினைத்துக் கொ ண்டால் என்ன செய்வது என்றும் நிறைய முறை எழுத தவறியிருக்கிறேன்.

ஆனால் உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுள் சீனாவைப் பற்றி மேலும் நிறைய படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஒரு விமரிசனமாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இனிமையானவர்கள் இனிமையான நோக்கையே உடையவர்கள் என்பதை உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது.

Shiyu.

Wednesday 4 December 2013

30.11.2013


05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.

குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.

இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.

முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,

Suswagatham Sir!

kya Munache Ranabir?

குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு!  பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.

என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.

அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.

எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.

காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில்  ஏறிக்கொண்டான்.

ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!

இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,

 ரணபீர்! அது வேறு காலம்!
20.11.2013


என் Cover Photo-வில் வந்திருக்கும் இந்த "டோனா ரிக்க்ஷா"-க்கள் இல்லாமல் கொல்கத்தா கிடையாது. ட்ராம், ட்டுயுப் ட்ரைன், டாக்ஸி-க்கள் இருந்தாலும் சிக்கனம் மற்றும் வசதி என்று பார்த்தால் இந்த கை ரிக்க்ஷா-டோனா ரிக்க்ஷா-காரர்கள்தான் கொல்கத்தாவை நகர்த்துபவர்கள் என்று சொல்லலாம்.

இந்த கை ரிக்க்ஷா-காரர்களின் ஆகிருதி ஒரு "கோலியாத்" போன்ற உருவம், உழைத்து உழைத்து கடுமையாக சமைத்த தேகக் கட்டு. இவர்களின் உணவு வெறும் கோதுமைக் கஞ்சிதான், கஞ்சி என்றால் வெறுமென கோதுமையை தண்ணீரில் கலந்து அப்படியே ஒரு கிளாஸ், இரண்டு கிளாஸ் என்று குடித்தால் ஒரு உணவு வேலை கடந்தது என்று அர்த்தம். சிறிது ஆடம்பரமான உணவு என்றால் சப்பாத்தி போடுவதற்கு முன் நாம் உருண்டை பிடித்து வைத்திருப்போமே, அதில் ஒரு இரண்டு, மூன்று உருண்டை அவ்வளவுதான். இன்னும் சிறிது கொண்டாட்டம் என்றால் இந்த உருண்டைகளோடு கொஞ்சம் உருளைக் கிழங்கு மசித்து, கொஞ்சம் சிறிய வெங்காயம் சேர்த்து, பச்சை மிளகாயுடன் சாப்பிடுவதுதான் அவர்களுடைய ஸ்டார் ஹோட்டல் விருந்து.

நாள் முழுக்க ரிக்க்ஷா, கோதுமை உருண்டை, நடை பாதை வாழ்க்கை இதுதான் அவர்கள் வாழும் முறை. வம்பு, தும்பு கிடையாது. ஒரு கைலி, ஒரு முண்டா பனியன் இது இவர்களுடைய உடை. மிக கம்பீரமான ஆத்மாக்கள்.

ஒவ்வொரு முறை நான் கொல்கத்தா- பார்க் சர்க்கஸ் செல்லும் போதும் இவர்களுடன் எனது மதியத்தை செலவு செய்திருக்கிறேன். எல்லோருமே பங்களாதேஷ்-ல் இருந்து வந்த அகதிகள், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வாழ்கை நடத்துவது ஒரு பாடம்.

நான் அவர்களுக்கு வாடிக்கையாளர் என்பதை விட, நண்பன் என்பதே சிறப்பு.

சலாம் கொல்கத்தா!
19.10.2013

அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்பான காலை 9லிருந்து-11மணி வரையிலும் பிறகு மாலை 4-லிருந்து இரவு 8 மணிவரை வாகனங்களின் அணிவகுப்பு, எதோ இன்றே பிரபஞ்சத்தின் கடைசி நாள் என்பது போல் எல்லோரும் விரைகிறார்கள். அதில் சில பேர் அந்த இலக்கை அடைந்ததாக நேரிலும், செய்தியிலும் தெரிந்து கொள்வதுண்டு.

இப்போது சில நாட்களாக ஏதோ கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டு வாகை சூடியது போல் JCB, POKELINER, இயந்திரங்கள் மற்றவர்களுடன் எந்த விதமான நேரக் கட்டுப்பாடோ, வேகக்  கட்டுப்பாடோ இல்லாமல், 80- களின் என்னுடைய ஆதர்ச 500cc BIKE  RACER- Kevin Schwantz கூட தோற்கடிக்கப்படும் வேகத்தில், பயமேயில்லாத நெளிவு சுழிவுகளுடன் ஆரவாரமாக செல்லுகிறார்கள்.

சில சமயம் இவர்களுடைய CRANE-கள் JAMES BOND படத்தில் வருவது போல் முன்னால் சென்று கொண்டிருக்கும் கனரக வாகனங்களை கூட அப்படியே தூக்கிச் சென்றுவிடும் போலிருக்கிறது. என்னவென்று கேட்டால் கோவை மாநகரெங்கும் பாதாள சாக்கடைகளுக்கும், குடி தண்ணீருக்குமான குழாய்கள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்களாம்.

ஏன் இவர்கள் அதிகாலையிலும், போக்குவரத்து ஓய்ந்த பிறகு இவர்களுடைய போக்குவரத்தை வைத்துகொள்ளக் கூடாதா? ஒரு JURASSIC PARK படம் பார்ப்பது போலிருக்கும் மற்ற வாகன ஓட்டுனர்கள் இவர்களுக்கு வழி கொடுத்துஓடி ஒளியும் காட்சி.

எப்போதும் போல் நம் நகரக் காவலர்களும் சேப்பாக்கில்  கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல் வியந்து, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் எல்லோருக்கும் கழுத்து  மற்றும் மூட்டு வலிக்காக எலும்பு மருத்துவர்களிடம் நேரம் ஒதுக்கச் சொல்லவேண்டும். இந்த JCB, POKELINER-ன் இரும்புக் கைகள் யார் தலையிலாவது ஆசிர்வாதம் செய்தால், அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் பாக்யராஜ், ஹாஜா ஷெரிப்-ன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவுடன், அடுத்த டேக்கில், அம்பிகாவின் கை வளையல்களை திருப்புவதற்காக அடகு வைத்த கடையின் வாசற்படியில் போய்  விழுவதுபோல், நேராக யமலோகம்தான்.யம கிங்கர்களுக்கு travelling allowanceகூட  கிடைக்காது.

சமீபத்தில் சரண் ராம் தன்னுடைய சுவரில் வடபழனியிலிருந்து STERLING ரோட்டில், இருச் சக்கர வாகன ஊர்வலத்தின் போது தான் "மக்கா" என்று அலறியதாக எழுதியிருந்ததை மறக்கமுடியாது. சாலையின் இரு ஓரங்களிலும் இவர்கள் ஒரு யானையின் கால் அளவுள்ள  drilling bit-ல் தோண்டும்போது எந்தவிதமான பாதுகாப்பும் பயணிகளுக்கோ, அல்லது இவர்களுடன் பணி புரிபவர்களுக்கோ கிடையாது. இவர்கள் தோண்டும் குழிகளுள் நாமே நம்முடைய உயர, பருமனுக்கு தகுந்த மாதிரிக்கு பார்த்து படுத்துக்கொள்ள வேண்டியதுதான், மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வளர்ச்சிப் பணி முக்கியம்தான் அனால் எந்தவிதமான முன்னெச்செரிக்கையும் இல்லாமல் செய்யும் பணி ஆபத்தையும், ஒரு விதமான பீதியையும் தான் நமக்கு கொடுக்கின்றன. நாம் இன்னுமொரு 20 அல்லது 30 வருடங்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பது ஒரு சவால்.

45 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட, சா.கந்தசாமியின்  இறவாப் புகழ் பெற்ற சாயாவனம் புத்தகம் தான் நினைவிற்கு வருகிறது
Birthday Greetings to Bharathi Mani




24.08.2013

பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு Intelligent property- ஐ வாழ்த்துவதற்கு வயது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். Business, Family, Club, Tour இவைகளைத் தாண்டி எனக்கென்று ஒரு கனவு உலகத்தை உருவாக்கி கொள்ள முடியுமென்ற நம்பிக்கை உங்கள் " பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம்" எனக்கு கொடுத்தது. நான் தில்லி, நாகர்கோயில் மற்றும் திருவனந்தபுரம் செல்லும்போதும், நாடகங்கள், பஞ்சாபி நண்பர்களை பாவிக்கும் போதும் உங்களின் நினைவு எனக்கு வரத் தவறுவதில்லை. இதற்கு சிகரம் வைத்தமாதிரி என் தந்தை புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் ஆதலால் ஒரு PIPE-யும் பெங்களூரில் இருந்து வரவழைத்துக் கொடுத்தேன்.ஆகையால் பாரதி மணி சார், என் கூடவே வாழ்ந்து வருகிறார். உங்கள் தொலைபேசி, அலைபேசி எண்கள் கிடைத்தபோதும், உங்களுடன் பேசாமலேயே ஒரு ஏகலைவனாக இருக்கப் பிரியப் படுகிறேன்.என்னை மாதிரி பொருள் தேடி களைத்து வாழ்கையில் அடுத்து என்ன என்று திகைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக தொடர்ந்து உற்சாகபடுத்துவதற்கு, எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
27.09.2013

அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு.
என்ன ஸ்ரீ இவ்வளவு காலையிலேயே!
இல்லை sir, நான் நள்ளிரவு 2 மணிக்கே கூப்பிடவேண்டியது,
சொல்லு ஸ்ரீதர் என்னாச்சு?
sir, KVP. ஸ்ரீனிவாசன் போயிட்டான் sir!
சிறிது நேரம் ஆயிற்று , நான் என்னுடைய சுயநிலைக்கு வருவதற்கு.
sir, நினைவிருக்கிறதா? நாங்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன் ஒரே நாளில் தான் உங்களுக்கு ரிப்போர்ட் செய்தோம்.
ஆமாம் ஸ்ரீ. ஞாபகம் இருக்கிறது!
ஸ்ரீதர், நான் ஒரு 6 மணிக்கு ரெடியாக இருக்கிறேன். மற்றவர்களிடமும் சொல்லிவிடு!எல்லோரையும் PICK-UP செய்து கொள்ளலாம்.

ஸ்ரீதர் வரும்வரை KVPS-ன் நினைவுதான்.

 KVPS-க்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஹோசூர் வரை Juristiction. நான் KVPS -ஐ அழைத்துக்கொண்டு Launch செய்ய Slide Projector, Product samples, ஒரு வாரத்திற்கான மற்ற ஆயத்தங்களுடன் இட்டாண்டஹள்ளி, ஜிட்டாண்டஹள்ளி எல்லாம் தாண்டி காலை ஹோசூர் போய் நள்ளிரவு கிருஷ்ணகிரி வந்து அத்தனை சுமைகளுடனும் ரூம் போட்டாயிற்று.
அடுத்தநாள் காலை முதல் Appointment-லேயே projector சொதப்ப, அதை மூடவே முடியாத மாதிரிக்கு  KVPS கையில் ஏந்திக்கொள்ள lodge-க்கு ஊர்வலம் கிளம்பினோம்.

இடையில், நான் ஸ்ரீனி நீ  lodge-க்கு போய் பில்  செட்டில் செய்து ரெடியாகு, நான் சின்ன தலைவரிடம் Trunk call புக் பண்ணி சொல்லிவிட்டு,  வேறு  Projector-ஐ
சேலத்தில் கொண்டுவந்து  கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கிருபாச்சாரியர்.வீரராகவன்-ஐ லைனில் பிடித்தால்
சுந்தர்!வெற்றி செய்தி எதாவது இருந்தால் சீக்கிரம்  சொல்லு! இங்கே எனக்கு சூட்டில்  கொப்புளம் வந்துவிடும் போலிருக்கிறது என்றார். அப்புறம் இங்கே நடந்தவற்றை சொல்லி குளிரப்பண்ணி, அன்றிரவே ஹரி-ஐ சேலம் old Railway ஸ்டேஷன் அருகே எங்களுடைய ஆஸ்தான Raj Bhavan-ல் சென்னயிலிருந்து Projector-ஐ கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடு செய்து ரூமிற்கு திரும்பினால்   KVPS லாட்ஜ் வாசலில் Projector-ன் மேல் ஒரு வேஷ்டியை போட்டு மூடி ஏதோ போல்  ஏந்திக் கொண்டிருந்தான். என்னடா ஸ்ரீனி என்று கேட்டால், இல்லை அப்படியே கொண்டுபோனால் TTS வேலை தீர்த்துவிடுவார் என்று சொல்ல இருவரும் சேலம் திரும்பிவந்தது மாவீரன்.அலெக்ஸாண்டர் பாபிலோன் வந்ததற்கு இணையானது.

பிறகு மற்றொரு  Projector-டன் கிருஷ்ணகிரி சென்று பேருந்து நிலையத்தின் அழகை கண்டு கழித்து, காலையில் இட்லி, தோசை கிடைக்காமல் பரோட்டா-விற்கு பால் ஊற்றி சாப்பிட்டு, அடுத்த முறை வரும்போது கேனில் தண்ணீர் கொண்டுவரவேண்டும் என்று சங்கல்பத்தை எடுத்துக்கொண்டதும், மறுபடியும்  Projector-ன் built-in screen ரிப்பேராக அதே வேஷ்டியை திரை சீலையாக மாற்றி 15 நாட்களுக்கு ஒப்பேற்றி பிறகு சேலம் திரும்பியது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை.

எனக்கு சென்னை உயர்பதவிக்காக மாற்றம் கிடைத்தவுடன் KVPS தன் சேலம் வேலையை விட்டு விட்டு  எங்கோ போய்விட்டான். இரண்டு, மூன்று மாதம்  கழித்து ஒரு நாள் மதியம் ரிஷப்ஷனிஸ்ட் ராஜி,  sir,உங்களுக்கு போன் என்றவுடன் KVPS எதிர்முனையில், ஸ்ரீனி எங்கடா போயிட்ட? என்றால், இல்லை sir, எனக்கு எல்லோரிடமும் வேலை பார்க்க முடியாது என்றான்.

மறுபடியும் ஒரு இரண்டு ஆண்டு கழித்து இரவு வேலை முடிந்து வீடு திரும்பினால் KVPS டிபன் சாப்பிட்டு கொண்டிருக்க, என் இல்லத்தரசி KVPS மறுபடியும் வந்துவிட்டார் என்றாள்! பிறகு கிளம்பும்போது ஸ்ரீனி பணம் ஏதும் வேண்டுமாடா? என்றால் வேலை வாங்கிக் கொடுங்கள் என்றான். துரோனச்சாரியார் பால்கிஷன் சாரிடம் சொல்லி அவருடைய இன்னொரு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்த சில மாதங்களுக்கு பிறகு அங்கிருந்தும் சில மாதங்களில் எங்கோ போய்விட்டான். மிகவும் நல்லவன்,யாருக்கும் தொந்திரவு கொடுக்காத உத்தமமான ஆத்மா.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, ஸ்ரீதர் காரோடு வெளியே நின்று கொண்டிருந்தான். sir, KVPS 2 மணிக்கு மாரடைப்பால் காலமாயிட்டான் என்று சொல்ல, நான் "நல்லவனுக்கு அழகு சொல்லாமல், கொள்ளாமல் போவது"  என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தேன்.

இம்முறை KVPS எங்கு போயிருக்கிறான் என்று தெரியும்!
17.09.2013

15th December 2007 விடியற்காலை சுமார்  நான்கு மணிக்கு ஒரு சுஹிர்தமான சொப்பனம் கண்டு விழித்துக் கொண்டேன். அந்த கனவை மறக்காமல் இருப்பதற்காக என் துணைவியிடம் சொல்லி வைத்து விடலாம் என்ற யோசனையோடு அவளை துயில் எழுப்பினேன். அவள் அதெற்கெல்லாம் சற்றும் அயராமல் Ceaser சும்மாதான் குரைத்துக் கொண்டிருக்கிறான்!

நீங்கள் கவலைப்படாமல் தூங்குங்கள் என்று அவள் தன் தூக்கத்தை தொடர, அம்மா! நான் ஒரு கனவு கண்டேன்! என்று சொல்லி நான் ஒரு கோயிலில் நுழைவதையும்,கோயிலின் சுத்தத்தையும், அதன் விசாலத்தையும்  அங்கிருக்கும் வேதியர்களும் அப்போதுதான் ஹோமத்தை முடித்துக் கொண்டே, சுந்தர்! ஏன் இவ்வளவு தாமதம்? சீக்கிரம் சேவித்துக் கொள்! நடை சார்த்தவேண்டும் என்று துரிதப்படுத்தினார்கள் என்றும்  சொன்னவுடன், என் துணைவி சுதாரித்துக் கொண்டு ஓ! அவர்களுக்கும் உங்கள் நேரந்தவறாமை தெரிந்து விட்டதா? என்று அந்த நேரத்திலும் வாரினாள்!

 பிறகு அவளே தொடர்ந்தாள், ஒரு வேளை உங்கள் பிறந்தநாள் இன்று என்று ஸ்ரீ ரங்கநாதர் சந்நிதியில் நேமம் வீரராகவனும், விழுப்பனூர் மணிகண்டனும் காத்துக் கொண்டிருப்பார்கள் போல! என்று நான் சொன்ன கனவை அவளும் ஆமோதித்தாள்.

பிறகு என்ன? மறுபடியும்  கும்பகர்ண மார்க்கம்தான்!

காலை பத்துமணிக்கு அவசர அவசரமாக கார்-ஐ எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரில் வழி கேட்டு, வேம்கடபுரத்தில் ஒரு பெருமாள் கோயில் இருப்பதாக தெரிந்து கொண்டு போய் இறங்கினால் நான் கனவில் கண்ட அதே ஸ்ரீ: ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் திருகோயில். நான் இறங்கி நடந்தபடியே என் மனைவியிடம் நான் இந்த கோயில்-ஐ அடிக்கடி கடந்து போய் இருக்கிறேன், ஆனால் சேவிப்பதற்கு வாய்க்கவில்லை! என்று சொன்னேன், மேலும் ஏன் மற்ற மகான்களுக்கு அறிவுறுத்தியபடி, என்னை கோயில் எல்லாம் கட்டச் சொல்லாமல் சேவிக்க மட்டும் வரச்சொன்னார் என்று அவளுடன் பேசியபடி சேவித்து, அவல் பிரசாதம் வாங்க வந்தபோது, Trustee இளையாழ்வாரும், வேல்நம்பியும் என்னை அழைத்து, நீங்கள் பணிகொள்வார் குழாமில் சேர்ந்து ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்யுங்கள் என்று பணித்தனர்.

ஆஹா!காரணராஜர் எனக்கு கட்டளை இட்டுவிட்டார்! நீ ஸ்ரீரங்க த்தில் பிறந்து வளர்ந்தாலும் உனக்கு வைகுண்ட ஏகாதேசி வைபவ ப்ராப்தி மட்டும்தான் அங்கு, மற்றவையெல்லம் இங்குதான் என்று.என்னுடைய சொப்பனதிற்கான காரணத்தை சொல்லிவிட்டார் காரணராஜர்!

நானும் அடியேன் தண்டம்! என்றும் சமர்ப்பித்து

நான்கிநாலே கைங்கர்யம்
தேகத்தாலே பிரதானம், இத்தே
எளிமையும், இன்னார் இணையார் வாசியற்று
முப்பலங்களையும் அளிக்குமிறே.

நேற்று எம்பெருமானை பெரிய திருவோண புறப்பாட்டு மஹொத்சவத்தில் ஸேவித்து உய்யுண்டோம்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று
காரேய் கருணை, காரண கரிவரதா
நின் செவ்வடி செவ்வி திருக்காப்பு.
24.08.2013

74 வயது இளமையான எனது தந்தையின் சமீபத்திய கவிதை

Sachin Tendulkar,Roger  Federer-யை பார்த்து
கற்றுக்கொண்ட பேட்டிங் நுணுக்கம் எல்லாம்
ஸ்ரீரங்கம், புஷ்பக் நகர் கொசுக்களிடம்
செல்லுபடியாவதில்லை!

மாலை 4 மணிக்கே, கோட்டைக் கதவு, புறவாசல்
பலகணி, சாரளம், அனைத்தையும் மூடியபின்பும்
போர்பரணி பாடி பறக்கின்றன கொசுக்கள்.
எங்கே உள்ளது என்று தெரியவில்லை
அவற்றிற்கான திட்டிவாசல்!

உடலில் கடிபட்ட இடத்தை மின்னலென நாடி
களிநடனம் புரியும் விரல்களுக்கு
முன்னமே இத்திறமை வாய்த்திருந்தால்
ஒரு வீணைக் கலைஞர் என்றோ, கிடாரிஸ்ட்
என்றோ பேராவது கிடைத்திருக்கும்!

ஆனால் இப்போது விருப்பமின்றியே இரத்த தானம்
செய்யும் பேறல்லவா கிடைத்திருக்கிறது!

கார்த்திகேயன் இரத்தினஸ்வாமி
11.08.2013

2 அதிசயம் ஆனால் உண்மை!
எனது மகன் இந்த பருவத்திற்கே உடைய வேகமும் விருப்பங்களும் உடையவன்! புத்தகங்கள் என்றால் Clive Cussler, Dan Brown, Restaurant என்றால் New Yarker, Don Pepe, மியூசிக் என்றால் Back Street Boys, Taylor Swift, டிவி நிகழ்ச்சிகள்  என்றால் Bare Grills, Les Straud,CQB கல்லூரி போக மற்ற நேரங்களில் CART ATTACK-ல் ரேஸ் கார் ஒத்திகை!

என் தந்தை என்னிடம் மெதுவாகப் பொருமுவார், ஏம்பா! இவன் நார்மலாகவே இல்லை! மேலும் நம் தாய்மொழி தமிழில் இவன் எதுவும் செய்வதில்லை என்று . அதற்கு நான் சப்பைக்கட்டு கட்டுவேன், வெய்ட் பண்ணலாம்பா! எல்லாம் மாறிவிடும்.

அதிசயம் No.1.  கடந்த சில தினங்களாக Bombay Kannan-ன் ஒலிச் சித்திரமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" கேட்க ஆரம்பித்திருக்கிறான்.வீட்டில் பொன்னியின் செல்வன் சம்பந்தமாக கலந்துரையாடல், அவனுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்வது என்று என் மனைவியும் பிஸியாக இருக்கிறாள்.பொன்னியின் செல்வன் புத்தகங்களையும் படிக்க  எடுத்து வைத்துள்ளான்.

இந்தப் புஸ்தகத்தை விலை கொடுத்து வாங்கி நூல் நிலையங்களுக்குத் தந்தால் சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்தவாறு ஆகும். லட்சுமிதேவிக்கு நேரில் பூஜை செய்வதில் பயனில்லை. சரஸ்வதியைத் திருப்தி செய்தால் லட்சுமி தேவியின் மனம் உருகும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிவாக்கு-நிச்சயம் பொய்க்காது!

அதிசயம் No.2. கடந்த மாதம் இவன் தன்னுடைய ஆப்ரிக்க தமிழ் நண்பனுடன் ஈஷா யோகா நிலையத்துக்குச் சென்று 3 நாள் "சத்குருவுடன் யோகா" நிகழ்ச்சியில் கலந்து திரும்பினான்! வந்தவுடன் ஒரே புலம்பல், என்ன டாடி, வெறும் சாம்பார் சாதம், பழங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள், தயிர் சாதம் தரவேயில்லை! ஆனால் அவனே சற்று நேரம் கழித்து சொன்னான்-அமைதியாக இருப்பதற்கு கற்று கொண்டேன்!

உடனே எனக்கு Actor சரண்யா-வின் புகழ் பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது. எனக்கும் மகிழ்ச்சி! யானை வந்தால் ஏறிக்கொள்ள, சப்பாணி வந்தால் தவழ்ந்து கொள்ள, வாழ்க்கையின் நிதர்சனத்தை என் மகனும்  புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான் என்று.
04.08.2013

இன்றுஞாயிற்றுக்கிழமைகாலை 11மணிக்கு நெல்லை கண்ணனின் "தமிழ்பேச்சுஎங்கள்மூச்சு" பார்த்த .முடித்த  பின் செய்தித் தாளில் மூழ்கி  எதேச்சையாக நிமிர்ந்தபோது- கேடி பாய்ஸ், கில்லாடி Girls,( தலைப்பே பயமுறுத்துகிறது ! ) விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகி இருந்தது. சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டி?, யாழினி என்ற சிறு பெண் (12 வயது ?) பாடுவதற்கு அழைக்கப்படுகிறாள்,

யாழினி மேடைக்கு வருவதற்கு முன், Bar போன்ற ஒரு சிறு மேஜையில் உள்ள காலி மதுக் கிண்ணத்தை எடுத்து சிப் பண்ணிவிட்டு " எந்தன் கண்ணில் எழுலுலகங்கள் வாராய் கண்ணா! என்ற பாட ஆரம்பிக்கிறார். எனக்கு புரிகிறது செட்டில் பாடும்போது போதையில் பாடும் ஒரு scene -ஐ portray பண்ணுகிறார்கள் என்று.

யாழினி-க்கு இன்னும் வயதிருக்கிறது மது-வை எப்படி அணுகுவது என்று! இது போதாமல் நான் மிக விரும்பும் Mr. Vijay Prakash தன்னுடைய Judgement -ஐ மது அருந்தியவர் போல உளறியவாரே சொல்லுகிறார், இருவருக்கும் பலத்த கரகோஷம், இதற்குப் பின் உச்சகட்டமாக இசையில் எல்லாம் சாதித்து முடித்த சுசித்ரா, யாழினியை திரும்பவும் பாடசொல்லி உற்சாகப்படுத்தி, விஜய் பிரகாஷ்,Voice Expert ஆனந்த் இருவரையும் மேடைக்கு கூட்டிசென்று ஆளுக்கொரு காலி மதுக்கிணத்துடன் தீர்த்தவாரி செய்து  ஆடி முடிக்கிறார்கள். எனக்கு இப்பொழுது கூட நம்பமுடியவில்லை நான் பார்த்தது உண்மைதானா என்று!

ஊடகத்தில் என்ன சொல்ல வருகிறார்கள்? நமக்கெல்லாம் nativity-ஐ பற்றி ஒன்றும் தெரியாது என்றா? ஒரு corporate media எப்படி இந்த சிறுவர்களை வைத்துக்கொண்டே  சூப்பர் சிங்கர் முடிந்தபின் எந்த ஒரு சிரமும் இல்லாமல் ஒரு ப்ரோக்ராம் நடத்தமுடிகிறது?, நம் நேரத்தையும் உணர்வுகளையும் எப்படியெல்லாம் சேதப்படுத்துகிறார்கள்.

எல்லா Judge-களும் ஸ்ருதி, பாவனை,performance என்பதை தாண்டுவதேயில்லை.இந்த போட்டியாளர்களின் பெற்றோர்களும் MBBS, Engineering-க்குப் பிறகு தங்கள் பிள்ளைகள் எக்கேடு கெட்டாலும் இந்த தளத்தில் தான்  இதை எல்லாம் தாண்டி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்!

எப்படியும் இந்த program- ஐ ஒரு 20 நாட்களுக்கு முன்னராவது  ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். Vijay டிவி-ல் ஒருவருக்கு கூட இதை மீள் பதிவில் பார்க்கும்போது நெருடலாகத் தோன்றவில்லையா? Internal Sensor board  கிடையாதா? மீடியாவிற்கு ஒரு பொது மனிதனின் ஆசாபாசங்களை தொடுவதுதான் வெற்றி இலக்கு, அதற்காக இப்படியா? காக்கை எருமையின் புண்ணைத் தோண்டுவதுபோல!

ஏற்கெனவே நான் NDTV, TIMES NOW, HEADLINES TODAY & CNN-IBN-ல் இருந்து ஓடி வந்துவிட்டேன். இனிமேல் TV பார்க்கப் போவதில்லை!
03.05.2013

மறதி

யானை   - எப்போதும் இல்லை
நாய்         - எப்போதாவது
மனிதன் -  எப்போதுமே!

இதை உண்மையாக்க 31  வருடம் கழித்து  வந்தான் எனது பால்ய சிநேகிதன் .

கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி என் மீட்டிங் அறையில் 5 மேனேஜர்கள் சமேதராக, இவ்வருடTarget-யாவது வென்றடைய பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தபோது வந்த முதல் அலைபேசி அழைப்பை Silent-ல் போட்டு விட்டு தொடர்ந்தபோது,  அடுத்து  வந்த தொலைபேசி  அழைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.அழைப்பை ஏற்ற உடன் அம் முனையிலிருந்து நீங்கள் மீனாக்ஷிசுந்தரம்(என்னுடையபூர்வாசிரமப்பெயர்) தானே? நான் தியாகு கரூர்-ல் இருந்து பேசுகிறேன். உங்களுடன் 8-ம் வகுப்பில்1978-ம் வருடம் படித்தேன், இவ்வாறு ஒரு முனையில் அவர் தொடர்ந்து பேச அனுமதித்து விட்டு நான் சுதாரித்து கொள்ளப் பார்த்தும்  என்னால்  முடியவில்லை. மேலும் எங்களு டைய சம்பாஷணைகளை கீழ் கண்டவாறு தொடர்ந்தபோதும்,

தியாகு: நம் கிளாஸ் டீச்சர்  குளோரி மரகதம்!
நான்       : ஆமாம்
தியாகு:நீங்கள் கூட சதாசிவத்தின் சைக்கிளை  பிடுங்கி வைத்துக் கொள்வீர்கள், நான்  தான் சமாதானம்    செய்து வைப்பேன்.
நான்  : அப்படியா?
தியாகு :நீங்கள் கூட கையெறி பந்தினால் என் இடது முதுகில் என்னை அடித்த வடு இன்னும் இருக்கிறது.
நான் : அப்படியா ? (சரியான தீவிரவாதியாய் இருந்திருப்பேன் போலிருக்கிறது)
தியாகு : நான் கூட உங்களை நீங்கள் படித்த கல்லூரி விடுதியில் வந்து சந்தித்தேனே!
நான்  :அப்படியா?
தியாகு :நீங்கள் புதுகோட்டை-க்கு குடி பெயர்ந்த போது நான் மேல ரத வீட்டில் வந்து  சந்தித்தேனே!
நான் :அப்படியா?
தியாகு : உங்கள் இளைய சகோதரர்  மனோகர்  எப்படி  இருக்கிறார்? அம்மா அப்பா   எப்படி  இருக்கிறார்கள்  ?
நான் : எல்லோரும் நன்றாக  இருக்கிறார்கள், நான் இந்த 10-ம் தேதி வியாபார அலுவலுக்காககரூர் வருகிறேன், கட்டாயமாக உங்களை சந்திக்கிறேன்  என்று எனக்கே என் மேல் முதல்முறையான பரிதாபத்துடன், தியாகு-வுக்கு பிரியாவிடை கொடுக்க நேர்ந்தது. இவ்வளவுக்குப் பின்னரும் அவரை எனக்கு தெரிந்து கொள்ள முடியவில்லை . அந்த மாலை, இரவு முழுவதும்முதன் முறையாக எனது மூளை-யை கசக்கிய போதும் அவரை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல் உறங்கிப் போய்விட்டேன்.

எனது பள்ளித்தோழன் GT, கோகுலக் கண்ணன் நிறத்தைப் பெற்றவனாக இருந்தாலும், நல்லகளையும், வடிவும் உள்ளவன், மேல் உதடும் மூக்கும் சந்திக்கும் இடம் நல்ல அழுத்தத்துடன்அவன் புன்னகையை கூடுதலாக்கும்.

கண்கள் இரண்டும் நல்ல பளபளப்புடன் எப்போதும் ஒரு தேடலுடன் கூடியது, தலை நல்லதேங்காய்எண்ணெய் தடவி படிய வாரி, சுத்தமான உடை உடுத்தி, எப்போதும்உற்சாகமும் சாந்தமும் உடையவன். அவனுடைய பள்ளிச் சீருடையில் கால்ச் சட்டை மட்டும்இருவர் போட்டுக் கொள்ளும்படி இருக்கும். அதே போல் தேசிய மாணவர் படை சீருடையும்அவனுக்கு  அப்படியே வாய்த்திருந்தது.

அவனுடைய பின்னந்தலையில் ஒரு முடிக் கற்றை மட்டும் படியாமல் அவன் எங்குஇருந்தாலும் பின் புறம் பார்த்தால் கூட உடனே சொல்லக் கூடிய அடையாளம். அவன் குறும்பன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அவனை GT என்றே கூப்பிடுவோம், ஏனென்றால் அப்பொழுது GT என்றால் மல்தா அல்லது ஆட்டையை போடு என்ற ஒரு" ஸ்லாங்: இருந்தது. அவன் எவ்வளவு ஆட்சேபித்தாலும் அவனை GT என்று சொல்லி வெறியேற்றுவதில் எங்களுக்கு ஒரு அளவில்லாத ஆனந்தம். சடாரென்று கனவு கலைந்து எழுந்த நான் சற்று சுதாரித்தவுடன் இந்த GT -தான் நேற்று மதியம் தொலை பேசியில் என்னை தன் அன்பால் ஆட்கொண்ட G.தியாகராஜன் என்று உணர்ந்தேன்.

பிறகு அந்த 10-ம் தேதி அவனுடனும் எனது மற்றொரு பள்ளித் தோழன் சதாசிவமும், கரூர், திருவள்ளுவர் விடுதியில் இரவு உணவருந்தி, கூடிக் குலாவினேன்என்று  சொல்லவும் வேண்டுமோ! இப்பவும் GT-ன்  பின்னந்தலை முடிக் கற்றை அப்படியே இருக்கிறது.

காலம் எவ்வளவு தூரம் நம்மை தள்ளிச் சென்று விடுகிறது!

Letter to Mr. Anand Raghav, Stage Personality and Writer


18.10.2013

My Sincere appreciations to a Stage Wizard!

Just read your “Porutham” a short story, in Diwali Malar, a purposeful purchase, this year.

Seeing your notification on FB about this short story, I have landed on your page, not have given any significance to Nanjil Nadan, S. Ramakrishnan, Dhanshika, Mrithula and Santra Prajin photograph on Kavithayini.Thamarai.
Initially I thought that I have surfaced into corporate world again, but your transition from a five star Hotel meeting to the beloved Kalyani Atthai and her activities, is a beauty. Kalyani athai’s first and second theory, the conversation with Dhuraisamy and Srinivasan while Krishnan mama looks on, her selfless work to merge the couple, finally her frustration towards the attitude of the present generation have been written by you very thoughtfully and  will reach every proposed couple.

I understand your concern for the aftermath of divorce and constrain to favor the ideology of Living Together.

You have written this story without any support of vernacular slang or sequel of incidents.  You have fabricated with an illustrative yolk of concept, gracefully.

Every publication of a writer, is to give a child-birth again, in spite you have proved that you are fertile.

I have been updated in your FB status, about your drug allergy, leading to conviction over Patti Vaidhyam and mentioned about deterioration of your health.

In fact it is all a difficult task, for a writing brain, to cross all this inevitable events of Real life.

I wish you become a Bookmark in writing.
02.10.2013

Sathya Meva Jaeyathe, Hey Ram, the two words of a simple man, I am not going to write any of his freedom struggles, since we are not capable of following his foot paths, and ready to bash any politician, to lift them as our future Leader or prime minister.  Certainly, neither we do not know the responsibility of a prime minister, nor he does.  We are always ready to accept even a new actor Vijay Sethupathy as our Leader, who knows, he will become, and to that extent we Indians have an attitude of Devotion to the super stardom.

For long time we have been talking about a prime minister of India, biggest Democratic country, gives his speech of Independence Day, in from a glass booth. Now we are fixing an auspicious day even to a chief minister to confront a prime minister.  We do not have any right to talk about Freedom fights.

During my second standard in school, my Social studies teacher Mrs. Saraswathy, who lived near a lane, very adjacent to my school, tried to instill about Bapuji who was searching a pencil, was given to him by a close mate, I had a difficulty to understand this contest, suddenly from the course of adopting alphabets in my first standard. Later Putli Bhai, Porbunder and Bapu’s Birth year were a problem in every examination. When I was in 8th standard, I had been to Rajkot, Porbunder, Sabarmati, with my friend Elango while his Uncle was driving a “Taurus truck” en-route to Delhi & Gujarat, to cater Neycer products. By my 9th standard I appeared for a District Level Essay writing event about Mahathmaji, that time I have been reading his “My experiments with the Truth” and understood the essence of his Ahimsa principle, Truthfulness, Being a vegetarian, value of friendship, the desire over feminine body even after hearing Kasturibha’s father passing away, One India, the proposal to dissolve Congress party and the death in the hands of his own countrymen.

Truly I am not able to follow all his qualities sincerely. In the 10 standard Mr. Sivalingam, my Tamil Teacher, narrated a prose on “Gandhiji”, still in my vivid memory.

By 1982, my maternal Uncle-Balu mama, availed leave to his SBCO job at Indian Post and Telegraphs, has already reserved  Tickets for Gandhi- the movie, directed by Richard Attenborough, the first movie for Ramba & Urvasi cinema theater, I think, mama, myself, Mano,Thambudu and Banu have all enjoyed the Movie. Balu mama only took us to Veerapandiya Kattabomman; I do not know why he has done all this things for us. Now he is down with Parkinson syndrome and walks with a stick like Gandhi. I would appreciate the ‘will’ of Richard Attenborough, casting Ben Kingsly, to act as Gandhi leaving Indian actors, but Kasturiba is our own Rohini Hattangadi, only Indian women can portray the real femininity, to establish the role of real Mahatma had been proved.

Later the Liquor barren Mr. Vijay Mallya has brought the belongings of Bapuji from an Auction, Thank God; at least he was awake, made us proud Indians. Legendary actor Kamal Hasan spent his money and energy to remind Gandhi again on his own language with the movie-‘Hey Ram’, further he had an opportunity to sing a song “Roopa notilathan vaaluraru Gandhi”. I used to go to my office which was situated at Gandhi Mandapam Road, Kotturpuram, is his presence being an Enigma?

On this day, I Salute the Father of our Nation and the real mahatma- Maa kasturibha.

20.08.2013

My face book friend Mr. Charles J Forman’s article on women’s transformation to the domestic work at Germany and my son’s teacher Prof.Shanthi Shankaralingam’s questionnaire to me, on AN IMPACT ON WOMEN EMPLOYEE IN THE MIND OF MEN in India, both are contrary on its core message, eventually induced me to share some thoughts.
In fact in India Women have long years of Log book for working in various fields viz., Agriculture, Cooking, Teaching, War-espionage, Weaving, Handicrafts, Masonry, Rehabilitation centers, Judicial, medicine, Micro-biology labs and religious missionary . 

Thus Women prevail silently in all terrains of Human work; we can say that they are predominant. Women themselves do not promote their efficiency, determination, dedication and desire to take up the responsibilities on par se to the Men including Leadership qualities, on their respective fields but mankind is undoubtedly benefited. 

Particularly both men and women shared their work with an ethic, though when our literacy rate was low, but only in the contemporary years we see sexual abuse and harassment. When women were deployed into some specialized domains, particularly Banking and Information Technology, in the night hours, sexual abuse & Sexual harassment took place only amidst their cherished circle.

We do not hear such stories from Tirupur and Sivakasi, where Women work force is huge, but the incidents are more only at corporate sector, Banks and IT parks and it leads to bigger arguments.
Aiswal, the capital of Mizoram, this place is mainly notable for its huge population of women laborers and the crime rate against them. Today, our capital the so called Delhi, safety for women is under the scanner of the family

The society should be well informed with the statistical ratio of women employment and the government should increase the space for women at all places, like the country does for the colonies.
08.06.2013

இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான முன்னோட்டமான முக்கியமான நிகழ்வு என்றே சொல்வேன், மேலும் நான் மிகவும் விழிப்புடன் இருந்து மற்ற உறவினர்களின் உணர்வுக் கலவையை உணர முடிந்தது. என்னுடைய மனைவியின் 7 சகோதிரிகளையும் 4 சகோதரர்களையும், இப் பிறவியில் நேரில் உறவாட, ஊடல் கொள்ள முடியாத, என்னுடைய மாமனார் ஸ்ரீமான். சேது ராமஸ்வாமி முதலியார்-ன் 25-வது நினைவு நாளில் சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் ஒரே இடத்தில் என்னுடைய- நேர் மைத்துனன்-திரு. நமசிவாயம் வீட்டில், பெரிய மைத்துனன் திரு.இராமகிருஷ்ணன், மூதாட்டி மாமியார் செல்லம்மாள் முன்னிலையில் மருமகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள்( சராசரியாக 20 வயது) -களுடன் ஒரு கலவையான உணர்வுகளுடன் எந்த பேதமும் இல்லாமல் நடந்தது. மந்திர ஓசைகளுடன்,மாமனாரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் தந்து , தாங்கள் எல்லோரும் ஒரே தந்தையின் பிள்ளைகள்தான் என்பதையும், எதையும் தாங்கும் இதயம் கொண்ட என் மைத்துனன் நமசிவாயம், தன் வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தின் மூலமாக வெற்றிகரமாக நடத்தினான் என்றே நினைக்கிறேன். ( என் மகனின் காதில் "மலை ஏறினாலும் மச்சினன் தயவு வேண்டும், தாய்க்குப்பின் தாய் மாமன் " என்பதை சொல்லத் தவறவில்லை )

என் பெரிய மைத்துனர் ஸ்ரீ.இராம கிருஷ்ணன் (திருமதி. மங்கைஇராம கிருஷ்ணன் எனது தாய் வழிசகோதரி) வயதில் எனது தந்தைக்குச் சமமானவர், கல்வியில் மட்டும் பொறியாளர் இல்லை, வாழ்வியலிலும் கூடத்தான். அர்ஜுனனுக்கு தேரோட்டியான ஸ்ரீ பரந்தாமனைப் போல் எல்லோருடைய தாபங்களையும் அம்புகளைப் போல் மார்பில் ஏந்தினாலும், மிக நுணுக்கமான தன்னுடைய வசீகரத்தால் ஒருங்கிணைத்தது ஒரு மாயம். அதற்குப் பின்னால் இருக்கும் வலிகளையும், அவமானங்களையும், சமாதானம் செய்து கொண்ட விதம் எனக்கு ஒரு படிப்பினை. தன் இரு குழந்தைகளையும் USA -வில் பொருள் தேடியது போதும், தன்னுடன் இருப்பதே அவர்கள் கடமை என்று சொல்லக் கூடிய வலிமை படைத்தவரின், பிரார்த்தனைகள் "நான் உங்களுக்குப் பதிலாக வந்துவிட்டேன்" என்று என் தெய்வத்திரு மாமனாருக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

உச்சகட்டமாக இத்தனைபேரும் கோவை, புலியகுளம் Cheshire Homes மன நிலை குன்றிய முதியவர்களுக்கான வாழ்விடத்திற்கு சென்று மதிய உணவு வழங்கி வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துகொண்டோம். ஒரு கூடுதல் தகவல் Mr. Cheshire ஹிரோஷிமா-வை குண்டு வீசி தாக்கியவர், அதற்கு பிராயச்சித்தமாக அவர் குடும்பத்தினர் உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்தாபித்து இருக்கும் (ஒரு கிளை நிறுவனம்) Cheshire Homes. மனநலம் குன்றிய ( ? ) திரு. ராஜா, சுமார் 60 வயது முதியவர் அநேகமாக எல்லோரையும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு வரவேற்றது என் மனதை தடுமாற வைத்தது. இரும்பு பெண்மணிகளான என் மனைவியும்,முதல் பெண் நண்பருமான திருமதி. விஜயலக்ஷ்மியும், சகோதரி திருமதி. மதுமதி நமசிவாயம்-ம் சற்றே கலங்கி போனார்கள்.Cheshire Homes-ல் எங்களுக்கு நன்றி சொன்ன போது நாம் அனைவரும் மனநலம் குன்றியவர்களாகவே இருப்பது போல் உணர்ந்தேன்.

திரும்ப வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தி, விடைபெறும்போது என் அன்பின் மருமகள் பொறியாளர் உதயராகினி நமசிவாயம் புகைப்படக் கலைஞராக மாறினாள். அவளின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமைக்குரிய குடும்பத்துடன் அகலமான புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு திருமண நிகழ்வில் கூடி குளிர்ந்தது போல் உணர்ந்தேன்.

தவமாய் தவமிருந்து,
சுந்தர் (குடும்பத்தார்)

Tuesday 3 December 2013

24.07.2013

அன்பே தகழியாக,
ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக
நன்புருகி ஞான சுடர் ஏற்றினேன்
நாரணர்க்கு நான்.

+2-ல் என் மனைவி பொருளாதாரம் , வணிகவியல், கணக்கு பதிவியல் பாடப்பிரிவில்சிறப்பாக தேர்ச்சிபெற்றார்.
 இது நடந்தது 1988-89-ல்.

என் மகனும் இதே பாடப்பிரிவில் 1200 மொத்த மதிப்பெண்ணிற்கு மிக அருகே மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சிபெற்றார்.

இப்பொழுது 2013-ல்.
இந்த பொதுத் தேர்வின் போது இருவரும் சேர்ந்தே முக்கியமான, தேர்வுக்கு அடிக்கடி வரக்கூடிய கேள்விகளை ஆலோசித்து தயார் செய்து கொண்டிருந்தார்கள். நான் சற்று ஆர்வ மிகுதியால், மிக கவனமாக என் மனைவியிடம், நீங்கள் படித்ததோ 88-ல், உங்களுக்கு எப்படி இந்த முக்கியமான கேள்விகள்தான் வரும் என்று சொல்ல முடியும் என்று கேட்டததற்கு, இருவரும் போங்க டாடி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது என்று "அழகன் " படத்தில் மம்முக்கா-வை ஓட்டுவதைபோல் என்னை சைடு எடுத்தார்கள்.

 நானும் விடாமல் என்னுடைய பௌதீக, MBA பிரதாபங்களை எடுத்து சொன்னவுடன், அவர்கள் இருவரும் சொன்ன பதிலின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவேயில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டார்கள்?


பாடத்திட்டம்  1988-க்கு முன்னாலிருந்தே மாறவில்லையாம்.
Greetings to the Legend Mr. Mahendran, Director-Mullum Malarum on 25.07.2013




2004 என்று நினைக்கிறேன், ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி ரோட்டில் என் அலுவலகத்திற்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். நான் என்னுடைய புல்லெட் மோட்டார் சைக்கிளில் வந்த படியே வணக்கம் சொன்னேன், அவரும் பதிலுக்கு சொல்ல, நான் என்னுடைய செக்யூரிட்டி-டம் வண்டியை கொடுத்து நிறுத்த சொல்லிவிட்டு வரும் வரை  நின்று என்னை நலம் விசாரித்தார்.  இத்தனைக்கும் அதற்கு முன்னால் அறிமுகம் கிடையாது. ஒரு 5 நிமிடம் பேசியதற்கு பிறகு மரியாதை கருதி நான்  விடை கொடுத்த பின்பே சென்றார். என்ன மாதிரியான மனிதத்துவம்.

இப்பொழுது பஸ்சிலும்,புகைவண்டியிலும், விமானத்திலும் கூட, ஒரு மணி நேரமோ, இல்லை, ஒரு நாளோ பயணம் செய்யும்போது கூட சக மனிதர்கள் பேசக் கூட விருப்பமில்லாமல் இறுக்கமாக இருக்கிறார்கள். அப்படி ஏதும் பேசுவதற்கு முற்பட்டால் பைத்தியக்காரன் என்றும், வேலை இல்லாதவன் என்றும் நினைத்துக் கொள்ள கூடிய காலம். நாம் அந்த காலத்தையும் திரு.மகேந்திரன் மாதிரியான மனிதர்களையும் சந்திப்பது இனி  மிக அரிது.

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அவரை சென்றடையும் என்ற நம்பிக்கை இந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
08.07.2013

What a Win!

Finally the Wimbledon trophy arrived into the big hands of Andy Murray and his coach Ivan Lendl after the decisive Battle. It was fantastic night, to watch that one sided Match.  The other aspect which surprised me was that Andy Murray sat on his chair with a sigh of relief, the match controller approaching him, Murray asked permission to share his Victory Josh with his mates who were all sitting in the Player Box.  The controller permits Murray. Often other winners, bulldozing the way in to their Box, taking advantage of their Victory and the status of Celebrity.  But Murray climbed into his Box (in fact there’s no direct way to reach the Player’s Box from the Center Court) with a rare courtesy. 

He embraced everybody leaving his mother since he didn't know the faces during his emotional burst. His mother also patiently waited and beckoned the guard to call his son and embraced him.  What a mother she is! What a courtesy they are celebrating! Wonderful mother & son. Seldom have we witnessed this type of an incident. 

Not to forget Djockovic, who is a legend who kept his emotions tight, celebrating Murray’s rich Legacy, himself a True Champion indeed!


I pen this with the memory of my Guru, friend Raghuram and my coach Mr. Nandakumar
01.09.2013

My Tributes to the Voices of Ponniyin Selvan- Sound Book (Bombay Kannan)

இந்தக் குரல்களை மறக்கமுடியாது! ஒரு கும்பமேளா சத்தத்தில் கூட இவர்களின் குரலை வைத்து நான் கண்டுபிடித்துவிட முடியும்!

சாதாரணமாக ஒளிச் சேர்க்கையும் ஒலிச் சேர்க்கையும் சரியான விகிதத்தில் சேர்வதால்தான் காணொளி வசப்படுகிறது. ஆனால் இதில் குரல் கொடுத்துள்ளவர்களுக்கு ஒரு நிபந்தனை! இனிப்பை பற்றி பேசலாம்! ஆனால் சாப்பிடக்கூடாது!

உடல்மொழி கேட்பவர்களாகிய நமக்குத் தெரியாது என்ற நிச்சயத்துடனே அவர்கள் பேசவேண்டும். சிறிது ஏமாந்தாலும் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்குத் தன்னை திருடன் என்று சொல்வது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படிப்பது போல் ஆகிவிடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற உடனே நமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமக்கு உடனே நினைவுக்கு வருவதற்கான காரணம் முதலில் அவர் தோற்றம், உடல்மொழி, பிறகுதான் அவர்  வசனம்(நம் காதில் விழும்).

ஆனால் இங்கு இவர்களின் குரல் மட்டுமே! என்னதான் அவர்கள் professional,amateur கலைஞர்களாக இருந்தாலும் continuity-க்கும், அந்த சீன்க்கு உண்டான moodம் இல்லையென்றால் வேலை தீர்ந்தது.

அவர்களின் குரலில் இருந்த அன்பு, வீரம், கலாச்சார உணர்வு, அதிகாரத் தொணி யாவும் அக்காலத்தில், குறைந்த பட்சம் கல்கியின் காலம் வரை அந்த தொன்மை, இனிமை இருந்தே இருக்கிறது.

எல்லா புகழும் கண்ணனுக்கே!(Bombay)

சுந்தர சோழராக தன் குரலால் வாழ்ந்திருக்கும் SK. ஜெயக்குமார், குந்தவையான கீர்த்தி-யி டம் தன்னுடைய இளமை காலத்து காதலை சொல்லுமிடத்தில் உள்ள வாத்சல்யமும், நெகிழ்ச்சியும், கீர்த்தி (குந்தவை) அதை புரிதலுடன் தந்தைக்குச் சமாதானம்  சொல்லும்போதும், அரசுடைமை தன் சகோதரர்களுக்கு தான் என்று விவாதம் செய்யுமிடமும் மெய் சிலிர்க்க வைக்கும். பெண்களை பெற்றவர்களுக்கும், பெண்களுக்கும் தான் அந்த உணர்வின் மகாணுபாவம் தெரியும்.

என் உறவினர்கள், நண்பர்களுமான நமச்சிவாயம், கிட்டண்ணன்,ஆவுடையப்பன் அண்ணன், ராஜாராம் அண்ணன், ஸ்டீபன் அண்ணன், சிவகுமார், தியாகு, மற்றும் என் மணைவி ஆகியோர் அந்த விஷயத்தில் பாக்கியசாலிகள். எனக்கும்,என் தந்தைக்கும் இந்த ப்ராப்தம் கிடைக்கவில்லை. எனது மகனுக்காவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குந்தவையாக குரல் கொடுத்த கீர்த்தியும், வானதியாக குரல் கொடுத்த வித்யாவும், அடிக்கள்ளி! என்று செல்லமாக கோபித்துக் கொள்ளும்போதும்,வானதியாக அக்கா!அக்கா! என்று குழையும்போதும் அந்த நேசத்தை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் அந்த மாதிரியான நேசத்தை பைரவி திரைபடத்தில் சுமித்ரா, லதா ஆகியோர் ஆடிப் பாடும் பாடலான "இதோ! இதோ! என் நெஞ்சிலே, மற்றும் ரம்பா, தேவயாணி பாடும் "மல்லிகையே மல்லிகையே" விலும் ஒரு வகையான ஆச்சரியத்தில் உறைந்து உணர்ந்திருக்கிறேன். கீர்த்தி, வித்யா போன்ற காலத்தை வெல்லும் குரல்கள் இன்றளவும் உள்ளனவா?

நந்தினியாக ஃபாத்திமா பாபு, ஒரு உலோக பெண்குரல், பெரும்பாலும் பொருள் பொதிந்த, அதிகராத் த்வனி கூடிய குரல்-ஒரு மாயம்! நான் கல்லூரியில் படித்தபொழுது இ(அ)ன்றைக்கு அக்கன்னா ( ஃ) பாத்திமா தொலைக்கட்சியில் செய்திகள் வாசித்தாலும், வாசிப்பார் என்று சொல்லி நண்பர்களின் கோபத்திற்கு ஆளாகி அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து பாத்திமா செய்தி வாசிப்பதை கேட்ட காலம் நினைவிற்கு வருகிறது.

அருண்மொழிவர்மராக அனந்தன், வந்தியத் தேவனாக இளங்கோ, பூங்குழலியாக ஸ்ரீவித்யா, ஆழ்வார்க்கடியானாக ரமேஷ்,அநிருத்தராக கல்யாண்ஜி, பழுவேட்டரையராக வேலுச்சாமியும் நம் மனக்கண் முன்பாக நிற்கிறார்கள்.இவர்கள் முகங்கள் எனக்குத் தெரியாவிட்டாலும் இவர்களுடைய குரல்கள் என் ஜீவியமுட்டும் வாழ்ந்திருக்கும், நானும் தேடிக்கொண்டே இருப்பேன்.

பொருள் தேடும் இந்த காலத்தில் பாம்பே கண்ணன் தன் கனவை மட்டும் மெய்ப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய தமிழ்த் திரையுலகம் பாம்பே கண்ணனை தேடிவரட்டும். வந்தே மாதரத்தை மீண்டும் இலைஞர்கள் மத்தியில் எழுச்சியுடுவதற்கு ஒரு பரத் பாலா,ரஹ்மான் செய்தது போல CK.வெங்கட்ராமன், பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வன் ஒலிச் சித்திரத்தை மிக நுணுக்கமாய் செதுக்கி இருக்கிறார்கள்.

நான் இங்கே குறிப்பிட்டவர்களில் யாருக்கும் திரு, திருமதி அல்லது செல்வி என்றோ சேர்த்தவில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லோரும் இந்தியாவின் Intelligent Property-ஆக அறிவிக்கப்படுவதற்கான தகுதியுள்ளவர்கள்.

இந்த ஒலிச் சித்திரத்தை தொடர்ந்து கேட்டதின் மூலம் என் தாய் மொழியறிவில் முன்னேறியுள்ளதாகவும்,என்னுடைய பேச்சு மொழியில் இனிமைக் கூடியுள்ளதாகவும் நினைக்கிறேன்.