Wednesday 6 August 2014

Ajantha--10
-----------------
அந்த ஓவியங்களை இந்த முறை வேறுவிதமான, பக்குவப்பட்ட (என்றுகூட சொல்லலாம்),மனோநிலையில் தரிசிக்கும்போது என்னுடைய காதுக்குள் மட்டும் கீழ்க் கண்ட வரிகள் என்னை வேறு உலகத்துக்கும், ரசிக்கும் நிலையை வேறொரு உயரத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

காலத்தை வென்றவரின் எழுத்துகள்....
காலத்தை வென்ற படைப்புகளை தேடி அறியும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது...

அந்த அற்புதமான இரகசியத்துக்கு உலகில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத இரகசியத்துக்கு-என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே!நீ நன்றாக இருக்க வேண்டும்! சொல்கிறேன் கேள்!
மரஞ் செடிகளின் இலை ,வேர், காய், விதை முதலிய தாவரப் பொருள்களைச் சாறுபிழிந்து காய்சிச் சாதரணமாக வர்ணங்கள் குழைப்பது வழக்கம். தாவரப் பொருள்கள் காய்ந்து, உலர்ந்து அழிந்து போகக் கூடியவை.  ஆகையால் அவற்றிலிருந்து  உண்டாக்கப்படும் வர்ணங்களும் சீக்கிரத்தில் மங்கி அழிந்து போகின்றன.ஆனால், மலைகளிலும் பாறைகளிலும் சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன. இந்த வர்ணங்கள் காற்றுக்கும், வெயிலுக்கும்,மழைக்கும் மங்குவதில்லை.அழிவதில்லை.ஆகவே இந்த வர்ணப் பாறைகளை பொடி செய்து அதற்கேற்ற பக்குவப்படி அரைத்துக் குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது.இம்மாதிரி வர்ணப் பாறைகளைப் பொடித்துக் குழைத்த வர்ணங்களைக் கொண்டுதான் அஜந்தாவின் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன...பரஞ்சோதி!அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிஷூக்களைத் தவிர வேறு யாரும் அறியாத பரம இரகசியத்தை உனக்கு நான் சொல்லிவிட்டேன் என்று நாகநந்தி சொல்வதாக கல்கியின் வார்த்தைகள்....

அடுத்த பதிவுகள் முழுக்க முழுக்க என்னுடைய உணர்வுகள், என்னுடைய வார்த்தைகளில் பதிய விழைகிறேன். அஜந்தா ஓவியங்களை விவரிக்கும்போது கல்கியின் எழுத்துகளை தாண்டிசெல்வது அவ்வளவு எளிதானதல்லவே!

இங்கே கொடுத்திருக்கும் ஓவியங்களில் சூரிய வெளிச்சமோ, அல்லது டார்ச் லைட்டின் வெளிச்சமோ படும்போது அது என்ன மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றன என்று அறியும்போது, 2000-ம் வருடங்களுக்குப் பிறகும் இந்த ஓவியங்கள் நமக்காக காத்திருக்கின்றனவா? அல்லது நாம் இவ்வளவு சீக்கிரம் உணரும் பாக்கியம் செய்திருக்கிறோமா என்று நினைத்து பார்க்கும்போது அடையும் பிரமிப்பில் பலமுறை மூச்சு விட மறந்து நின்றது என் நினைவில் இருந்து என்றைக்கும் அழியாது!

I am out of the World!
Celestial........




Ajantha--9
---------------
எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து,-நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிஷூக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை.அதாவது சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணை பார்த்ததில்லை. ஆனால் ஜீவனுள்ள பெண்களை பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன்.மானிட குலங்களுக்கு எட்டா தெய்வீக சௌந்தர்யம் வாய்ந்த மடமங்கயர்களைப் பார்த்திருக்கிறேன்.அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அனங்குகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையை கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்திருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ்போல் வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும், இன்பமும்உண்டாயின=====

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் அனைத்தும் கல்கி, "சிவகாமியின் சபதத்தில்" நாகநந்தி பிஷூ தன் சகோதரன் புலிகேசியிடம் கூறுவது போல் அமைந்த உரையாடல்!

இவைகளை வெகு காலம் முன் படித்தும், சமீபத்தில் Bombay Kannan Kannan  ஒலி புத்தகத்தில் கேட்டும்,நான் என்னுடைய கற்பனையில் ஸ்தாபித்திருந்த அஜந்தா குகை ஓவியங்களை நேரில் கண்டபோது இன்னும் பல அரிய தகவல்களை அறிய முடிந்தது, ஆனந்தம், பேரானந்தம்!

அடுத்த பதிவில் ஓவியங்களுக்கான களமும், சாகாவரம் பெற்ற வர்ணங்களையும்  பற்றி......





Ajantha---8
----------------
நமது கோயில்களில் கூட சிற்றின்பத்தில் ஈடுபட்டிருக்கும் மாதிரியான சிற்பங்கள், குறிப்பாக கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரத்தில் பார்த்திருக்கிறேன்.கோபுரம் முழுவதுமே  காமசூத்திராவின் வெவ்வேறு நிலைகள் செதுக்கப்பட்டுள்ளது.அஜந்தாவுக்கும், சாரங்கபாணி கோயிலுக்கும் நான் குறிப்பிடும்படியான அளவுக்கு என்ன தொடர்பு என்று பார்த்தால், சாரங்கபாணி கோயிலும்,அஜந்தாவும் சம காலத்தில் உருவாக்கப்பட்டது.அதாவது இரண்டுமே 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது(சாரங்கபாணி கோயில் கோபுரம் இடிபாடுகள் வெவ்வேறு கால கட்டத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம், அதனால் வாத்சாயனரின் காமசூத்திர நிலைகளை அமைத்திருக்கலாம் என்றிருந்தால் கூட வாத்சாயனரின் காலம்(Common Era) 3-ம் நூற்றாண்டு). காமசூத்ராவை ஓவிய வடிவில் இதுவரை நான் எங்கும் பார்த்ததில்லை.

அஜந்தாவில் அந்த மாதிரி எந்த சிற்பங்களும் இல்லை.ஓவியங்களும் இல்லை. ஆனால் ஆண்,பெண் அங்க லாவண்யங்கள், வடிவங்கள்,நம்மை விட திரட்சியுடன்,திடகாத்திரமாகவும்,முழு வளர்ச்சி கண்டதாகவும், அவர்கள் அந்த கால கட்டத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வஸ்திரங்கள் நம்மைவிட நாகரீகம் மிகுந்ததாகவும் இருக்கின்றன.நம்மை வெவ்வேறு உணர்வுகளுடன் பெருமூச்சை செலவழிக்க வைக்கின்றன.அந்த சிற்பிகள், ஒவியர்களின் நாகரீக உணர்வு,ஆளுமைத் தன்மை நம்மை மூர்ச்சை அடைய வைக்கின்றன,குறிப்பாக ஆற்றாமை, இயலாமை,இவைகளை வருங்காலத்தில் எவ்வாறு காத்து வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது!

அஜந்தா ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே நைஷ்டிக பிரம்மச்சாரிகளான புத்த பிஷூக்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு குறிப்பிட்ட காலம் வரை(சந்நியாசிகளாக இருக்கும்போதே)வெளி உலகத்தின் தொடர்பு அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.ஆனால் அவர்கள் சந்நியாசம் மேற்கொண்ட வயது ஒருவேளை இல்வாழ்க்கையை சுகித்திருக்கும் வாய்ப்பை தந்திருக்கலாம்.புத்த பெருமானே இல் வாழ்கையை சுகித்தவர்தானே!

குறிப்பிடும்படியான ஓவியங்களை இணைத்திருக்கிறேன்!




Ajantha--7
---------------
மொத்தம் முப்பது குகைகள் என்றாலும் சுமார் 25 குகைகளுக்குள் செல்வதற்கு மட்டுமே அனுமதி.எல்லா குகைகளிலும் சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் அதனுடைய Stability, காலத்திற்கேற்ப, பாரமரிப்புக்கேற்ப வேறுபடுகின்றன.

முதலில் 28-வது குகையிலிருந்து 21-வது குகை வரை காலை 9 மணியிலிருந்து 11மணி, 20-வது  குகையிலிருந்து 7-வது குகை வரை-காலை 11மணியிலிருந்து மாலை 3 மணி, மற்ற 6 குகைகளை மாலை 5மணி வரை பார்ப்பதற்க்கு தயாராகுதல் உத்தமம்.போன பதிவில் சொன்ன மாதிரி சூரியனின் சஞ்சாரத்திற்கு தகுந்த மாதிரி குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தயாராக முடியவில்லை என்றாலும் எல்லா குகைகளிலும் "Sober fibreoptic lighting" (இங்கு sober-என்பதற்கு thoughtful & gentle என்றே பொருள் கொள்ள வேண்டும்) வசதிகள் செய்யப் பட்டுள்ளன.இந்த வசதிகளைப் பார்த்தபோதுதான் நான் என்னுடைய முதல் பதிவில் Don Brown-ன் Anjels&Demons புதினத்தில், வாட்டிகன் நகரின் தொன்மையான நூலகத்தில் Robert Langdon சிவப்பு ஒளியில் தேடுவதை குறிப்பிட்டு இருந்தேன்.அஜந்தா குகைகளில் பச்சை நிற ஒளிர்வுகள் உபயோகிக்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சிவப்பு&பச்சை ஒளிர்வுகள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? மேலும் Robert Langdon என்ன தேடினார்? என்ற இரு கேள்விகளுக்கும் இந்த பின்னூட்டத்தில் பதிலளிப்பவர்களுக்கு, நான் இன்னும் வெளியிடாத புகைப் படங்களை தொகுத்து DVD-ஆக, உங்களை வந்தடையுமாறு செய்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனால், சூரிய ஒளியில் அந்த ஓவியங்களை பார்த்தல் வெவ்வேறு கால கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.நீங்கள் மூர்ச்சை அடையாமல் இருக்க புத்தம், சரணம், கச்சாமி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பார்த்ததை நினைவில் கொள்ள ஹயக்ரீவ மந்திரம் உசிதமானது.

குகைகளில் சூரிய ஒளி பற்றி சொல்லும்போது, 1986-ல் நான் சித்தன்ன வாசல்,ஓவியங்கள், ஏழடிப் பட்டம் ஆகியவற்றை முதன் முதலாக தரிசித்தபோது,சித்தர்கள்(இங்கு ஜைனர்கள்)சூரிய வெளிச்சத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதில் மிகுந்த சிரத்தை கொண்டவர்கள் என்று கேள்விப் பட்டதாக நினைவு. அஜந்தா புத்த பிஷூக்கள் இம்மாதிரி, தேவையான நேரத்திற்கு மட்டும் சூரிய ஒளி உள் வருமாறு அமைத்திருப்பார்களோ என்பது என் உள்ளுணர்வு.சில குகைகளில் சாளரம் நுழைவு வாசலின் மேல் சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.சில குகைகளில் பக்க வாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.அம்மாதிரியான இடங்களில், மற்ற குகைகளில் வெளிச்சம் தேவையில்லாமல் நுழைய முடியாது, மிக சாமர்த்தியமாக அமைக்கப்பட்டுள்ளது>

குகைகள் தியானம் செய்வதற்கும், பாடம் படிப்பதற்கும், வசிப்பதற்கும்,Auditorium போன்ற வசதியுள்ள(Auditorium குகைக்கு தனியாக ஒரு பதிவு எழுதலாம்)உறங்குவதற்கும் ஆக, 30 குகைகளும் ரக வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.(அந்த காலத்திலேயே, எப்பிடி,எப்பிடி-1900 வருடங்களுக்கு முன்னாலேயே)
                                           
                                                                                        .....மீதி 8-ம் பதிவில்
------------------------------------------------------------------------------------------------------------
நாம் பார்க்கச் செல்லும் குகைகளை அடைவதற்கு முன்னரே களைப்பு அடைந்து விடும்படியான தூரம், சிரமமான வழிதத்தடம். வியர்வை உறுஞ்சுவதற்கு தோதாக எளிதான உடை, எளிதில் கழட்டும்படியான, மெலிதான காலணிகள் மிகவும் அவசியம்.சுமார் 20 குகைகளில் காலணிகளை வெளியே விட்டுதான் செல்லவேண்டும்.Fast Food வகைகள் கையில் வைத்துக் கொள்வது நலம். குகைகளில் கிடைக்கும் குடிதண்ணீர் மிகவும் சுவையாக இருந்தாலும், ஒரு சிறிய வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்வது நலம்.சிங்க வால் குரங்குகள் ஏராளம்!
------------------------------------------------------------------------------------------------------------












Ajantha--6

சிறிது மூச்சு வாங்கிக் கொண்டே,

ஆமாம், நாம் வடக்கு நோக்கி நடந்து இருக்கிறோம், அப்படி என்றால் மேற்கு திசை கடந்து, வடக்கு, மீண்டும் கிழக்கு திசை முழுவதுமாக கடக்கப்போகிறோம், அதாவது அஜந்தா குகைகள் குதிரையின் குளம்பு வடிவில் அமைக்கப் பட்டிருகின்றன.

அப்படியா? நீங்கள் ஏன் பின்னாலேயே வருகிறீர்கள்?

அவர்களிடம் நான் சொல்லாதது,
சில சமயங்களில் நாம் வேகமாக உத்வேகத்துடன்,முன்னேறி நடக்கும் போது, இல்லை அப்பா! எங்களால் நடக்க முடியவில்லை, ஏற முடியவில்லை! என்று புலம்புவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு பின்னால் நடக்கும்போது, பரவாயில்லை! அப்பாவே முடியாமல் நடக்கும் போது நாம் தொந்திரவு கொடுக்க கூடாது என்று அவர்கள் உற்சாகமாக முன்னேறும் முகாந்திரங்கள் அதிகம் உண்டு.

பெரும்பாலும் நாம் போயிருப்பது ஒரு Pleasure Trip என்ற மனோநிலையில், சிரமமான வழிகளை நாம் தவிர்க்கும் நிலையில், சிறிய தடை கூட மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் நாம் மனதளவில் தயார் நிலையில் இருக்கும் போது உடல் உபாதைகளையும்  மிக எளிதாக கடந்துவிடலாம்.

ஏன் ஜீ! இந்த சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் மிகவும் மதிப்பு கூடியது, பழமையானது என்று சொல்கிறார்களே, நம்மால் அதை சரியாக உணர்ந்து கொள்ள முடியுமா?இவ்வளவு சிரமங்களுக்கு Justification கிடைக்குமா?

கண்டிப்பாக!

ஆனந்தம் அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது!உணருவதில் அல்ல--
                                                                               பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர்.

(நான் எடுத்த புகைப் படங்கள் எல்லாவற்றையும் ஆல்பமாக இந்த 'தொடர் எழுத்து' முடிந்தவுடன் வெளியிடுகிறேன். நிறைய வித்யாசம் இருக்கும், ஓவியங்களின் வயது,சரியான கோணங்களை எடுக்க முடியாத மாதிரியான கட்டுப்பாடுகள்,பிளாஷ் உபயோகப் படுத்தாமல் எடுப்பதும் மிகுந்த வேறுபாட்டை  உருவாக்குகிறது)



Ajantha--5
----------------
பர்தாப்பூர் (Fardapur) T-ஜங்ஷன்க்குப் பிறகு நம்முடைய வண்டிகளை நிறுத்த சொல்லி  MTDC -AC பஸ்களில் நம்மை 5KM தொலைவில் உள்ள அஜந்தா வில்லேஜ்-ல் கொண்டு போய் விடுகின்றனர். தினமும் காலை 9 மணி to 5:30மணி வரை சுற்றி பார்க்க முடியும், முடியாவிட்டால் யாரும் அந்த அஜந்தா குகைகளில் இருக்க முடியாது, வந்துவிட்டு அடுத்த நாள்தான் சென்று பார்க்க முடியும்.Ajantha Caves-ல் அருமையான MTDC உணவகம் இயங்குகிறது.இருந்தாலும் கையில் போதுமான அளவுக்கு உணவு, தண்ணீர் வைத்துக் கொள்வது மிக மிக நல்லது.குகை ஒரு 4 அல்லது 5KM விஸ்தீரனத்திற்கு பரவி உள்ளது ஆகையால் திரும்ப வந்து செல்வது என்பது இயலாது. டோலி வசதி இருக்கிறது.நாம் குகைகளுக்கு செல்ல இன்னொமொரு இரண்டு பதிவுகள் ஆகலாம்!---------மற்றவை பிறகு,

எப்போதும் போல் விஜி, வருண் முன்னால் செல்ல, நான் பின் தொடருகிறேன், இதில் இணைக்கப்பட்டுள்ள புகைப் படங்கள் மீதி விஷயங்களை சொல்லிவிடும் என நினைக்கிறேன்.

இருவரும் என் கண் பார்வையிலேயே  இருந்தாலும் என் நினைவுகள் நாகநந்தி பிஷூவும், புலிகேசி சக்கரவர்த்தி பேசிக் கொள்ளும் பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது..........

வாதாபிச் சக்கரவர்த்தி நாகநந்தியிடம் கீழ் வருமாறு சொல்கிறார்!
அண்ணா! நீ சொல்லி இருந்தபடியே நான் நதி வழியை பிடித்துக் கொண்டு போனேன்.வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும் மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை நின்று அப்பால் வழி இல்லையென்று தோன்றியது. போகப்போக இப்படியே இருந்தது.ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த் தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியை பிடித்துக் கொண்டு போகிறேனோ என்று எண்ணினேன். அதைவிட பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது. நீ ஒருவேளை என்னை ஏமாற்றிவிட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம் போய் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கின்றாயோ என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திர குகைகளை அடைந்தேன்.

விஜியின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன்!

2000 வருடங்களுக்குப் பிறகும் வாதாபிச் சக்கரவர்த்தி விவரித்ததில், நாம் அந்த வழிகளில் கடுகளவும் மாற்றமில்லாததை உணர முடிகிறது!

(கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் எழுதும்போது எல்லா இடங்களுக்கும் சென்று வந்ததாக குறிப்புகள் இருகின்றது. குறைந்த பட்சம் இது கல்கி அவர்கள் அஜந்தாவை தரிசித்த பிறகு எழுதியதாக தான் இருக்க வேண்டும், அதாவது வாதாபிச் சக்கரவர்த்திகளின் குரலின் மூலமாக சொல்லும் செய்திகள்)

என்ன ஜீ ? நாம் 28-ம் எண்ணுள்ள குகைக்கு வந்து விட்டோம்! மற்றவர்கள் எல்லாம் அந்த பாதையில் செல்கிறார்கள் என்ற போதும், பரவாயில்லை என்று சொன்னீர்களே? தவறாக ஆரம்பிக்கிறோமோ?  

இல்லை இல்லை! காரணம் இருக்கிறது.............................அடுத்த பதிவில்,






Ajantha--4
-----------------
சுமார் 1900 வருடங்களுக்கு முன், குறிப்பாக கிறிஸ்துவுக்கு முன்,  ஸஹயாத்ரி மலைத்தொடரும், நர்மதாவின் கிளை நதியான வஹோரா-வும் இணையும் இடத்தில், மிக வைராக்கியமுள்ள  புத்த சந்நியாசிகளால் எழுப்பப் பட்டிருக்கிறது.இது எங்கோ ஒரு பொருளை செய்து கொண்டு வந்து இன்னொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் செயலாக இல்லாமல், அந்த இடத்திலேயே ஒரு மலைத் தொடரை, செதுக்கி வேண்டாதவற்றை கழித்து, தங்களுக்கு வேண்டிய வகையில் செய்து கொள்ளும் ஒரு மாய வித்தை. தவறு நேர்ந்துவிட்டால் திரும்ப சரி செய்ய முடியாது , அல்லது வேறு ஒரு  இடத்திற்கு அப்புறபடுத்த முடியாது என்ற ஒரு முடிவிலிருந்து, தலைகீழாக, விடையிலிருந்து வினாவிற்கு வரும் முறை!

கண்டிப்பாக ஒருவரோ அல்லது ஒத்த கருத்துகளுடைய பல மனிதர்களின் தீர்மானத்தை, கனவை எவ்வளவு பேர், எவ்வளவு காலம் மேற்கொண்டனர் என்ற கணக்கு இல்லாமல் முதலாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தொடரப்பட்டுள்ளது. நிகழ் காலத்தில் திட்டம் ஒன்று செயல் ஒன்று என்றிருக்கும்போது இதை கருக்கொண்டவர் எப்படி இத்தனை பேரை, இத்தனை காலத்திற்கு உடன்பட வைத்திருக்க முடியும், தன்னுடைய இறுதி காலத்தை உணர்ந்து அடுத்தவரிடம் பொறுப்பை கொடுத்து, காலத்தால் அழியாத மஹா காவியத்தை நிகழ்த்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரப்பப்பட்ட, ஸ்வீகரிக்கப்பட்ட ஒரு மதத்தினர், வெறும் சாதாரண மனிதர்களை மட்டும் கொண்டிருந்திருக்க முடியாது! ஆனால் அந்த கால கட்டத்தில், அது ஒரு புதிய மதம்!மற்றவர்களின் ஒத்துழைப்பு என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?என்ற வினாக்களுக்கு விடைகள் கிடையாது.பஞ்ச பூதங்களே சாட்சி!

புத்த சந்நியாசிகள் மட்டுமே இந்த இடத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் சம்சார வாழ்க்கையில் இருந்தவர்களின் உதவி இருந்திருக்க முடியாது. நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது, எத்தனை சந்நியாசிகள் சேர்ந்து இதை உருவாக்கி இருக்க முடியும்? என்று. அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்றாலும், என்ன மாதிரியான உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கும்?

சரி, அப்படியே அவர்கள் பற்றற்ற சந்நியாசிகள் தானே? என்று ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படியொரு நாகரீகம், கலாச்சாரம்,கொண்ட நிபந்தனை அற்ற, எதிர்பார்ப்பு இல்லாத மஹா மனிதர்களாத் தான் இருந்திருக்க முடியும்! அவர்களுக்குத் தெரியுமா? தம்முடைய படைப்புகள் இவ்வளவு புகழ் பெறுமென்று! கடமையை செய்வோம்! என்ற ஒரே நோக்கமாகத்தான்  இருந்திருக்க முடியும்!

மடாலயங்கள், விஹாரங்கள், பள்ளிகள் என்று பகுத்து கொண்டாலும் தூண்கள், விதானங்கள், மேற்கூரை, விட்டங்கள் அவ்வளவும் சிற்ப வேலைப்பாடுகள், சுற்றுப் புற சுவர்கள் எல்லாம் ஓவியங்கள்!

இதனிடையே பருவ வேறுபாடுகள், சூரியனின் சஞ்சாரத்தைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்ட"மாஸ்டர் பிளான்"

(நான் அங்கு எடுத்த புகைப் படங்கள்--இறுதியாக!)




Ajantha--3
----------------
இதற்கு முன்னால் அங்கு இரண்டு முறை சென்றிருந்தும், தேனிலவு சென்று  வந்தவர்களிடம் அங்கு என்ன பார்த்தீர்கள்? என்று கேட்டால், அவர்கள் என்ன பதிலை சொல்வார்களோ, நானும் அதைத்தான் பகிர்ந்து கொண்டதாக நினைவு! இந்த முறை 20 வருடம் கழித்து செல்வதால், ஒரு பத்ம வியூகம் அமைப்பதற்கு தேவையான அத்தனை முன்னேற்பாடுகளுடன் சென்றது காலத்தினால் அழியாத(?)நினைவுகளையும், சரித்திர புருஷர்கள் உலவிய இடங்கள் எது, எங்கு என்று தேடி, உணர்ந்து திரும்ப முடிந்தது.

ஏன் எல்லோரா அவ்வளவு உசத்தி இல்லையா? என்றால், எல்லோரா 5-ம் நூற்றாண்டில்தான் உருவாக்கப் படுகிறது.மேலும் ஹிந்து, பெளத்த, மற்றும் ஜைன கோட்பாடுகள் கூடிய கலவை!

ஆனால் அஜந்தா, முதலாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை, மிக நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக புத்த மதத்தினரால் மட்டும் குடை வரை பெற்றது. மேலும் சளுக்கிய இளவரசர்கள் நீலகேசி(நாகநந்திபிஷூ), புலிகேசி ஆகியோர் இந்த மடாலயங்களில் பயின்று, புத்த குருமார்களின் உதவியோடு அரசு அமைக்க முடிந்திருக்கிறது!

என்னுடைய புகைப்பட நிபுணத்துவம் பெற்ற நண்பர்கள்,மற்றும் Archaeological Survey of India, Rajesh Singh ஆகியோர் வெளியிட்ட  புத்தகங்கள் மூலம் நிறைய தகவல்கள் பெற முடிந்தது!




Ajantha--2

I carry a fireball, since I humbled at Ajantha Caves. It has happened to me during my 9th standard, when I was reading the legendary Kalki's "Sivagamiyin Sabatham", I was not able to read any other.Now I want to write my experience of Ajantha caves tour but it would be a sheer Travelogue.I know it's a challenge I personally took it, to write with the connections I have acquired so long.Is it humanly possible to  write the giant leap of my ancestors? But I would indeed write it as a proud Indian.I am at the cross road for now.............


Ajantha--1
---------------

The éther, at Ajantha monastery was a similitude to the experiences of Robert Langdon and Vetra @ the Secret Archives of the Vatican except for the lack of Oxygen-Angels and Demons, Dan Brown
Keep Guessing!

Thursday 5 June 2014

பொன்னிறமா, மொற மொறன்னு,
கெட்டியா, ஸ்பான்ஞ்-ல இருக்கிற மாதிரி,
ஆனந்த விகடன்ல கூட இதை சாப்பிடுவதற்கு
ரோடு ரோலர் தான் கொண்டு வரணும்னு
கார்ட்டூன் கூட போடுவாங்களே!

இதுங்களா சார்?
இல்லீங்க, இது மைசூர் ஹல்வா!

நான் கேட்கிறது
மைசூர்பாக்!

அப்படியே மருத மலையிலிருந்து
மேய்ந்து கொண்டு வரும்போது பார்த்த
கிராண்ட் ஸ்வீட்ஸ்-ல் கிடைத்தது
நான் கேட்ட  மைசூர்பாக்!
கால் கிலோவும் எனக்குத் தான்!

வேளுக்குடி கூட சொல்றார்,
ஸ்ரீ கிருஷ்ணருக்கு எந்த ரூல்ஸ்-ம்
கிடையாதுன்னு!


Tuesday 3 June 2014

4th June 2014
---------------------
தாயுமானவனுக்கு 75-வது பிறந்தநாள் வாழ்த்து!

உங்களுடைய நேர்மையான சிந்தனைகளையும்,விசாலமான பார்வையையும், இளமையானஉணர்வையும் என்னுள் எப்போது விதைத்தீர்கள்?
1971-ம் வருடம்,கரூர் St. Therasa's Convent-ல் Mrs.Samuel உதவியுடன் Mother Superior Sr.Julie Vicotoria-விடம் முதல் வகுப்பில் கொண்டு விட்டதும், டெரிகாட்டன் Half Trouser, Quovadis செப்பல், மீனாக்ஷி அம்மன் தேர் பொம்மை வாங்கிக் கொடுத்ததும்,ஒவ்வொரு கணக்கு தேர்வு அன்றும் உங்கள் சைக்கிளின் பாரில் உட்காரவைத்து கொண்டுபோய் விட்டு,எழுதி முடித்து வரும்போது, parry's சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாராட்டுவதும், என்னுடைய பாஸ்கட் பால் விளையாட்டுக்காக Anklet ஷூ உங்கள் நண்பர்கள் மூலமாக எனக்கு வாங்கிக் கொடுத்ததும்,நகுமோமு-வையும், Bony-em-யும் ரசிக்க சொல்லிக் கொடுத்ததும்,கல்கி,சாண்டில்யன், Chase, Mills&Boon படிக்கத் தூண்டியதும், திருமலை தென்குமரி, மேரா நாம் ஜோக்கர், என்ட்டர் தி டிராகன் சினிமா பார்ப்பதற்கும், ஆஷா கேலுன்னி நடனத்தை ரசிப்பதற்கும், நல்ல மதிப்பெண்கள் +2-வில் வாங்கியதால் திருச்சியில் விடுதியில் தங்கிதான் மேல்படிப்புகளை தொடரவேண்டும் என்று வற்புறுத்தி Prof.புருஷோத்தமன் சார் அவர்களின் பாதுகாப்பில் விட்டதும், தஞ்சாவூர்-ல் நான் வேலை பார்த்தபோது, ஒவ்வொரு திங்கள் கிழமையும் பாய்லர் பழுதடைந்து, வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறி, மிகுந்த வேலைப்பளுவினால் நான் அந்த வேலையை விட்டுவிட்டு நம்முடைய பஸ் பாடி கட்டும் தொழிலையே பார்த்துக் கொள்கிறேன் என்ற பொழுது, ஆண் பிள்ளையாய், அதுவும் முதற் பிள்ளையாய் பிறந்துவிட்டால் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று என்னை தேற்றியதும், பொறுப்புகளை உணரவைத்ததும்,மனைவி,மக்கள், வீடு, சொந்தத் தொழில் என்று தடுமாறிய போது, சோதனைகளை சாதனைகளாக மாற்ற வயது வித்தியாசமில்லாமல் என்னுடன் தோளோடு தோளாக நின்றதும், சமீபத்தில் அம்மாவை இழந்த போது, இன்னும் நான் இருக்கேன் உனக்கு என்று தேற்றியதும்,

எதற்காக அப்பா?
உங்கள் சரணங்களில் நான்!

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

உங்களுக்கு பிடித்த இந்த குறளே என்னுடைய சமர்ப்பணம்!

Saturday 10 May 2014

6th May 2012
Mangalore.

மொபைல் அதிர்கிறது!
சிங்காரவேலன் அழைக்கிறான்!
என்னப்பா? சொல்லு.

சுந்தர் எங்கப்பா இருக்க?
நான் உனக்கு எதிர்கோடியில்!
FM கரியப்பா ரோட்டிலா?
இல்லை இல்லை, மங்களூரில்!

தம்புடு சொல்லுடா!என்ன விஷயம்!

I am Counting my days-பா!

என்னப்பா இப்படி சொல்ற, என்னாச்சு?

இல்லை, பெங்களூர்-ல் இருந்து கிளம்ப நேரம் வந்சிருச்சு!
சென்னையிலேயே வேற வேலை!

அப்படியா? அங்கே சும்மா ஆபீஸ்-ல் பென்ஷன் தானே வாங்கிட்டிருந்த!

சரி! நான் பெங்களூர்லிருந்து கிளம்புவதற்கு முன் நாம "நடந்தாய் வாழி காவேரி"(சிட்டி&தி.ஜா) புத்தகம் படி நதி ஒரமாகவே பயணம் செய்யனும்னு சொல்லிட்டிருந்தாயே!

சரி!கிளம்பிடுவோம்!

தம்புடு! நான் மங்களூரிலிருந்து 9-ம்தேதி காலை சிருங்கேரி வந்துவிடுகிறேன்! அங்கிருந்து மடிக்கேரி  போயிடலாம்!

"குடகு"லிருந்து சிவசமுத்திரம் வரலாம்னு சொல்றியா? என்னப்பா தலைகீழாக  டிராவல் பண்ணுவதா??!!

Thursday 8 May 2014


சிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று சொல்வதிலே உரிமையும், இனிமையும் கலந்து பிரிக்க முடியாதவன் என்ற ஒரு உணர்வு இருக்கும். நாங்கள் இருவரும் 11,12,13 May 2012-ல், நடந்தாய் வாழி காவிரி(தி.ஜா-வின் வழிகாட்டுதலோடு), காவிரி தோன்றும் இடத்திலிருந்து, சிவசமுத்திரம் வரை ஒரு இண்டிகா காரில் ஓட்டுனர் நாகேஷ் உதவியுடன் பயணம் செய்தபோது, தம்புடு, பெங்களூரு ஆபிசில் உட்கார்ந்து வெட்டிக்கு புஸ்தகம்தானே படித்துக் கொண்டிருக்கிறாய், எனக்கு படிப்பதற்கு ஏதாவது suggest பண்ண முடியுமா என்று கேட்டதற்கு, நீ திரும்ப சென்னை போவதற்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவன் எழுதிய Covering லெட்டெர்,

Singaravelan Baladandayutham
To Me
6 Jun 2012

hi dear

பொஸ்தக பரிந்துரை கேட்டில்ல. ம்ம் இதத்தான் விதின்னு சொல்வாங்க.
படி. மொந்த மொந்தையா   கள்ளு குடிச்ச மாதிரி இருக்கும்

அப்பனே படிச்சுபொலம்பி, விருவிதுர்த்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, ரசிச்சு சிரிச்சு  கெட்டுப்போ.

படிக்க படிக்க -

இருவது / இருவத்தஞ்சு வருஷம் வீணடிச்சாச்சுனு   தோணும்.
அப்பன் ஆத்தாள வைய தோணும் (நல்ல பொஸ்தகத்தலாம் நமக்கு அறிமுகபடுத்தத் தெரியலேயே)    
குபுகுபுன்னு மோட்டுவளைய பாத்து பொக விடத் தோணும்
மழைல நனையத்  தோணும்
வெயில்ல நடக்கத்  தோணும்
இவ்ளோ பறவ பூவு இருக்கா -  பறவ புவ பேருலாம் தெரியலைனு தோணும்
தண்ணியடிக்கும் போது  அப்பளம் தான் சரியான சைடு டிஷ்ணு  தோணும்

இன்னும் நெறைய தோணும்!

அங்ஙனம்  தோண வாழ்த்துக்கள்

 அன்புடன்
தம்புடு

Wednesday 7 May 2014

9th April 2006
A Day of Fugitive

போலாம் சார்!
ஆனால் நீங்கள் Rayban போடக்கூடாது!
செயின், மோதிரம் போடக் கூடாது!
Rolex கட்டக் கூடாது!
லூயி பிலிப் pant, Shirt போடக்கூடாது!
பங்கஜ் அடுக்கிகொண்டே போக,
ராஜீவ்-ஐ பார்த்து, பங்கஜ் என்னை  கஷாயம் உடுத்த சொல்கிறான் என்று சொன்னதற்கு,
ராஜீவ் பதிலாக,
ஆமாம் சார், நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் சந்தனம்,குங்குமமே உங்களை மதராஸி என்று காண்பித்து கொடுத்துவிடும் என்றான்.

இடையில் ஜஹானபாத் நம்முடைய திண்டுக்கல் போல் பூட்டுக்கு பிரசித்தி பெற்றது, ரொம்ப விசேஷமான ஊர். மொத்த வடக்கு,வட கிழக்கு மாநிலங்களுக்கு கிரிமினல்களை அனுப்பி வைக்கும் ஊர். இரண்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து மெயின் ரோட்டுக்கு சுரங்கம் தோண்டி ஒரு 20 பேர் தப்பித்து விட்டார்கள். அந்த இடத்தை தாண்டுவதுதான் மிகவும் ஆபத்தானது!ஆள் கடத்தலும் ஜாஸ்தி!முதல்ல உங்களைத்தான் தூக்குவாங்க! எப்படி சார் வசதி! அமர்தீப் சின்ஹா வேறு ரொம்ப பயமுறுத்தினான்!

ஏம்பா!  எவ்வளவு பேர் போயிட்டு வர்றாங்க! map-ல பார்த்தேனே,NH 83 என்று வேற இருந்ததே?

இல்ல சார், எல்லோரும் மொத்தமா டூரிஸ்ட் மாதிரி போனா பிரச்சினை இல்லை, சென்னை மாதிரி நிறைய பஸ்களும் கிடையாது!ரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதி! என வேறு அந்த பட்னா Regional Manager நாராயணன் பயமுறுத்தினார்.

என்ன நாணா ! அப்புறம் எப்படி நம்ம ஞானம் பெறுவது?

ஒண்ணு செய்வோம் சார்! டாக்ஸி எடுத்திட்டு போயிட்டு இரவே திரும்பிவிடுவோம்! தாமோதர் சிங்கை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் அவர் கயா வேலையை பார்த்துக் கொள்வார்!

பங்கஜ் போய் வேண்டுமென்றே ஒரு ஓட்டை டாக்ஸியா பார்த்து எடுத்துக்கொண்டு வர, நான், நாணா, பங்கஜ், ராஜீவ், அமர்தீப், தாமோதர் சிங் ஆகியோர் எங்கள் புனித பயணத்தை துவங்கினோம்.
கிளம்பும் போதே எப்போதும் போல் காலை மணி 11. கார் ட்ரைவர் பங்கஜ்க்கு மிகவும் தெரிந்தவர். எங்களுடைய ரோலர் கோஸ்டர் பயணம் ஆரம்பிக்க  மோசமான காருக்கும், மோசமான செம்மண் ரோட்டுக்கும் நடந்தது ஒரு துவந்த யுத்தம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒரே புழுதி.காருக்குள்ளும் தான்!

அப்படி இப்படி என்று ஜகானாபாத் தாண்டும்போது ஒரு கஷ்டமும் இல்லாமல் கடந்து, மாலை சுமார் 4 மணிக்கு போதியை அடைந்து, புத்தம் சரணம், கச்சாமி சொல்லி,புல்லரித்து மெய்சிலிர்த்து, அங்கிருந்து நம் வீட்டிற்கெல்லாம் பேசி நீங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்ல,எல்லோரும் நீ புண்ய ஆத்மா தான் என்று வாழ்த்த, நேரம் கடந்து கொண்டிருந்தது.

அங்கிருந்து ஒரு 25 KM  தொலைவில் உள்ள விஷ்ணுபாத் சென்று, விஷ்ணுவின் பாதங்களுக்கு நாமே பூஜை செய்யலாம் என்பதால், அங்குள்ள பண்டிட்களின் உதவியுடன் பூஜை செய்துவிட்டு, திரும்ப வந்து,விட்டுப்போன"பால்கு"நதியை தரிசித்து முடிக்கும்போது 6 மணி.
நாணா, சார் பேசாமல் இங்கே இன்று தங்கிவிடலாம் என்று சொல்ல, பங்கஜும், கார் டிரைவரும் இல்லை! இல்லை! எவ்வாறாவது பட்னா திரும்பவேண்டுமென சொல்ல, திரும்பவதாக தீர்மானித்தோம்!

சரியாக பங்கஜ் ஆரம்பித்தான், சார்! நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை! குறிப்பாக டிரைவருக்கு பீடா போட்டாதான் கார் ஓட்டவரும் என்று சொல்ல, பீடா கடையை தேடி போனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்தக் கடையை முற்றுகை இட்டு இருந்தனர். ஒரு வழியாக எல்லோரும் பீடா போட்டு, பூமியை சிவப்பாக்கி கிளம்பும்போது,இரவு 7 மணி!

மறுபடியும் பங்கஜ் ஆரம்பித்தான்! நாம் ஜகானாபாத் நெருங்குவதால், எல்லோரும் சட்டையை கழற்றி கொள்ளலாம் என, எல்லோரும் சட்டையை கழற்றிக் கொண்டு, வேர்வையில் குளித்து, பனியனுடன் காரினுள் அமர்ந்து இருந்தோம்!பங்கஜ் பிறகு எல்லோருக்கும் இன்னொரு ரவுண்டு பீடா தர, எங்களுக்கு அவன் ஒரு Nativity கொண்டு வர முயற்சிக்கிறான் என்று தெரிந்தது.ஜகானாபாத் மக்களிடம் அவ்வளவு பயம்!

ஒருவாறு நாங்கள் மஹா நிர்வாணம் அடைந்து  பட்னா திரும்பியபோது இரவு 11மணி.

மனிதன் ஆசையை துறந்தால், ஏது இவ்வளவு அவஸ்தை!

உயிர் மேல் ஆசை இல்லாமல் எப்படி?

நாங்கள் போய்வந்த இடம் புத்த கயா.

பின்குறிப்பு
____________
தலையில் துணி கட்டியவாறு இருப்பவர்தான் பங்கஜ். முகத்திலேயே குறும்பு கொப்பளிக்கும்.ஒரு வாரத்திற்கு முன் பேசும்போது, சார்!இப்போது அவ்வளவு கடத்தல் பயம் இல்லை, மேலும் அப்போது லாலு வேறு இருந்தார்.ரோடுகள் கூட நன்றாக போட்டுவிட்டனர் என்றார். எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்!

















கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தாயிற்று. தெற்கு,தென் மேற்கு திசை மட்டும் எப்போதும் ஏதாவது பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. பெரியப்பா! நான் இன்னும் கன்னியாக்குமரியில் சூர்யோதயம் பார்க்கவேயில்லை என எனது சகோதரனின் 7-ம் வகுப்பு படிக்கும் மகன்  சூர்யா கேட்க,  இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் தொல்லை தாங்கமுடியலைப்பா!என்ற அலம்பலுடன் மந்திரிசபை ஒப்புதல் அளிக்க கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கொண்கண் வழியாக திரும்புவதென்று தீர்மானம் செய்யப்பட்டது.

எத்தனை முறை நாம் professional&Pleasure Trip வழியாக பார்த்தாயிற்று, என்ற சலிப்பில்லாமல் இருக்க, சுவாரஸியம் கூட்ட, நான் Les Stroud-க்கு நிபந்தனை கொடுப்பது போல், கீழ் கண்டவாறு  தடை விதித்தேன்.

No Travel Agency.
No Friends & Relative-s Support!
திருவனந்தபுரத்திற்கு No Flight,
மற்ற தொலைவுகளுக்கு No Taxi,
தங்குமிடங்களுக்கு No Auto.

என்று சொல்ல சிறிது தயக்கத்துடனேயே, தங்குவதற்கு, பயணம் முடிந்து ஊர் திரும்ப ரயிலில் நேராக வருவதற்கு online reservation செய்து முடித்தனர்.

கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை சாதாரண பேருந்துகள், நகர பேருந்துகளில் பயணம் செய்யப் பழகினர்.

விவேகானந்தர் பாறைக்கு Boat -ல் இடம் பிடிப்பதற்கு மட்டும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த இடத்திற்கு செல்லும் நேரத்தை அது  வெகு நேரத்திற்கு தள்ளியதால் சிறப்பு கட்டணம் செலுத்தினோம். ஆனால் அந்த சலுகையிலும் ஒரு நிபந்தனை, திரும்ப வரும்பொழுது வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்று இருந்தது.

நான் ஒவ்வொரு முறையும்  ஸ்வாமி விவேகானந்தர் பாறைக்குச் சென்றபோதும் வெவ்வேறு மனநிலையில் போனாலும், திரும்ப வரும்பொழுது மிகுந்த தெளிவுடனேயே வந்திருக்கிறேன்.(மறக்க முடியாதது-ரெஸ்ட் ரூம்கள் மிக சுத்தம்). திரும்ப வரிசையில் நின்று, படகில் ஏறி திருவள்ளுவர் சிலையில் இறங்கினால், எங்கள் பின்னால் யாரும் இறங்கவில்லை. ஒருவேளை வசதிகள் சரியாக செய்யப்படாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் பேருந்திற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த போது அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வந்த பேருந்தின் நேர்த்தியை  பார்த்தபோது எனக்கே சிறிது கலக்கமாயிற்று.

பேருந்தில் ஏறி புறப்பட்டவுடன் அவர்களது குதூகலம் திரும்பியது.மண்டைக்காடு தாண்டிய போது மூவரும், இந்த இடம்தான்-நீ தானே பொன் வசந்தம்-படத்தில் வந்த இடம் என்று அவர்கள் இரகசியம் பேசியது என் காதுகளிலும் விழுந்தது.

கன்னியாகுமரி தாண்டும் வரை அந்த வெயில் அவர்களை படாத பாடு படுத்தியது எனக்கும் சிறிது  கஷ்டத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம், கோவளம், கொச்சின், எர்னாகுளம் என்று சுற்றியதில் வாடி வதங்கி விட்டனர். திருவனந்தபுரம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஊர் ஆகிவிட்டது. கோயில், அதை சார்ந்த இடங்கள் ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமியின் பிரமாண்டம், குளம், மனிதர்கள் எல்லாம் ஒரு காரணம். திருவனந்தபுரத்தை பற்றி நானும் உடல் வணங்கி,தனியாக எழுத உள்ளேன். தமிழர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரும்பும்போது, ஆஹா டாடி! தங்குவதற்கும், உண்பதற்கும், Return Journey-க்கும் கொடுத்த 5 ஸ்டார் comfort எங்களுக்கு ரொம்ப happy என்று சொன்னபோது, எனக்கும் பரமானந்தம் தான்.

ஆனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை உணர்த்த மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது!

Wednesday 23 April 2014

முதலில் என்னுடைய தந்தையின் வாசிப்பு வாயிலாக , பிறகு பள்ளி பருவத்தில் "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப் படத்தில் லக்ஷ்மி, ஒய்.ஜி.பி, ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் பார்த்து பிரமித்து, அவரின்  மற்ற படைப்புகளை சிங்கார வேலனுடன் பகிர்ந்து கொண்டதும்,  நினைவுக்கு வருகிறது.என்னுடைய உணர்வில் காதல், திருமணம், சமூக அறிவு போன்றவற்றில் அவருடைய பாதிப்பும் இருக்கிறது. 90-களில் ஆழ்வார்பேட்டையில் பணி புரிந்தபோது, சிறிது தாமதமான இரவு வேளைகளில் அந்த குறுக்கு சந்துகளில் அவர் நடந்து சென்றதை பார்த்ததும் நினைவிருக்கிறது. என்னுடைய நண்பன் ரவி என்ன சார்? ஏதோ சிங்கத்தைப்    பார்ப்பது போல்  வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டதும்  நன்றாகவே நினைவிருக்கிறது.

JK பூரண நலம் பெற"வும்" வாழ்த்துகள்!

Saturday 29 March 2014

1983-88
----------
Hostel திருவிளையாடல்
----------------------------------
ஸ்டவ் திரி சிறிது மொத்தமாக இருக்கும், அதில் தீ பொறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து தீயை அணைத்தால், கங்கு அணையாமல் இருக்கும், அதன் சாம்பல் விழுவதற்கு நிரம்ப நேரமாகும்.
--------------------------------------------------------------------------------------
வார்டன் ஒதுக்கிய அறை எண் 63-ல் நுழைந்தால் இன்றைய செசென்ஸ் கோர்ட் நீதிபதி  முருகேசன், அண்ணாமலை யுனிவெர்சிட்டி பௌதீக இயல் துறை DR. சலீம், அன்றைய என் அறை நண்பர்கள்.

அறை 63-க்கு இடதுபுறம் இரண்டாவது, மூன்றாவது தளத்துக்கான படிகள், வரிசையாக திறந்தவெளி ரெஸ்ட்ரூம்கள், பிறகு அறை எண் 1-ன் வலதுபுற சுவர்.மாடிப் படிகளின் கீழ் EB மீட்டர் மற்றும் வரிசையாக மூன்று தளங்களின் மெயின் சுவிட்சுகள்.

நல்ல வேளையாக முதல் தளத்திலேயே அறை கிடைத்ததில் மகிழ்ச்சி! அதை தெரிவிக்கும் போதே, இருவரும் ரொம்ப சந்தோஷப் படாதே! இரவு வேளையில் நம்முடைய சீனியர்கள் மேல் தளங்களுக்குப் போகும் முன் நம் அறைக்  கதவைத் தட்டி திருடன் போலீஸ் விளையாடுவார்கள். ரெஸ்ட்ரூம்க்கு வரும் மற்ற நண்பர்கள் பேஸ்ட், சோப்பு ஓசிக் கேட்பார்கள். எல்லாவற்றையும் விட கதவைத் தட்டி, தட்டி ரொம்ப ரகளை பண்ணுவார்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

--------------------------------------------------------------------------------------
லுங்கி உடுத்தும் சூழல் கிடைத்தும் லோக்கல் கார்டியன் பாலு மாமாவின் கண்டிப்பான உத்தரவின் பேரில் வேஷ்டி, வெள்ளை கை வைத்த பனியன் தான் போட வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------
இரவு முழுவதும் புதிய சூழல் மற்றும் மேல் தளத்திற்கு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டுப் போகும் நண்பர்கள் அந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டி விளையாடிச் சென்றதன் காரணமாக சிறிதும் தூங்க முடியவில்லை. பத்து, பதினைந்து நாள் இப்படியே கழிந்தது. முருகேசன், சலீம் புலம்புவதின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது.

அன்று ஞாயிறு காலை எங்களுடைய வெஜ்.மெஸ்ஸில்  பிரட்&குருமாதான் காலை உணவு.
முருகேஷ்! நாம் அப்படியே வெளியே சென்று சாப்பிட்டு விட்டு எனக்கு கொஞ்சம் ஸ்டவ் திரி வாங்க வேண்டும் என்று சொல்ல
என்ன மச்சி? சாப்பிடப் போகலாம், ஆனால் எதற்குத் திரி வாங்க வேண்டும்?!.
நீ முதல்ல கிளம்பு, சாப்பிட்டுக் கொண்டே உனக்கு சொல்கிறேன்.
அப்படியே நடந்து போய் திரி வாங்கிய போது, முருகேஷ் இதுதான் என் ஐடியா, நீ சலீமை மட்டும் கரெக்ட் செய்துவிடு.
--------------------------------------------------------------------------------------
பயந்தால் நிம்மதி போய்விடும். பயப்படுபவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று வெளியே சொல்வதில்லை.
--------------------------------------------------------------------------------------
சலீம் இவன் சொல்வது  நல்லத் திட்டமாகத் தெரிகிறது, என்ன சொல்கிறாய் என முருகேஷ் கேட்க,அதற்கு சலீம், டேய்!  வேணாண்டா! மாட்டிகொண்டால் பின்னிவிடுவார்கள்.
நான், சலீம் இங்க பாரு, நீ நிம்மதியாக தூங்க வேண்டுமா? இல்லையா? நம்மை யாராவது பார்த்துவிட்டால் கூட ஒன்றுமே நடக்காதது மாதிரி போய்விடுவார்கள்.

சலீம் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு விட, சலீம் எங்களது அறைக்குள் தாழ் போடாமல் கதவின் பின்னால் ஒரு ஸ்டூல் வைத்து விட்டு நாங்கள் குரல் கொடுத்தவுடன், கதவைத் திறந்து பிறகு தாழிட வேண்டும்.

முருகேஷ் நான் சைகை செய்தவுடன் எல்லா மெயின்  சுவிட்ச்களையும் அணைத்துவிட வேண்டும். திரும்பவும் போட்டுவிட்டு அறைக்குள் என்னோடு நுழைந்து விட வேண்டும்.

சீனியர்கள் இரண்டாம் காட்சி முடிந்து, பேருந்து கிடைக்காமல் நடந்தே வந்து, அயற்சியாக மாடிப் படி ஏற ஆரம்பித்தனர். நான் என்னுடைய கழுத்தில் கம்பளி ஒன்றை சுற்றிக் கொண்டு, வெள்ளை வேட்டி, பனியனுடன், திரியை கங்குடன் வைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துகொண்டு ரெஸ்ட்ரூம் தூணிற்குப் பின்னால் நிற்கிறேன்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மெல்ல மெல்ல மேலே ஏறிவர, அவர்கள் எப்போதும்போல் கதவைத் தட்ட,முருகேஷ் விளக்கை அணைக்க, நான் திரியை ரஜினி சிகரெட் முழுங்குவது போல் வாய்க்குள் கொண்டுபோய், பற்களால் திரியை மெட்டிக் கொண்டு, வாயைத் திறக்காமல் ஒரு ஓலமிட, என்னுடைய பற்களின் இடைவெளியில் தீயின் ஜ்வாலை சிகப்பாக ஒளிர, அவர்கள் என்னைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று நினைத்துக் கொண்டு ஓட, நான் விரட்ட, அவர்கள் உயிர்மேல் உள்ள ஆசையில் திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.

நான் கொஞ்சம் விரட்டிவிட்டு முருகேஷ்-ஐ கூப்பிட, அவன் விளக்குகளை திரும்பப் போட்டுவிட்டு, இருவரும் எங்கள் அறைக்குள் நுழைய, சலீம் தாளிட சிரித்துக்கொண்டும், பாராட்டிகொண்டும், அன்று முழுவதும் நாங்கள் உறங்கவே இல்லை.

பயந்து ஓடியதில் அவர்கள் மின் விளக்குகள் அணைந்து திரும்ப எரிந்ததை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் முதல் தளத்தில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவே நம்பினர்.
-----------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையில் தானே வாழ்க்கையே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

அந்த 5 வருடமும் முதல் தளம் எங்கள் மூவரின் கண்ட்ரோல்-லில் தான் இருந்தது.




Saturday 22 March 2014

எனக்கு சாதரணமாக டர்பன் கட்டிய சீக்கியர் என்றால் மிகப் பிடிக்கும், தூர்தர்ஷனில் இருந்த தேஜெஷ்வர் சிங், நடிகர் கபீர் பேடி ஆகியோரின் ராக்ஷஸ ஆகிருதிகள், மற்றும் என்னுடைய நண்பன் வீரேந்தர் சிங் பஞ்சாப் பற்றி சொல்லும் வீர வரலாறு எல்லாம் கூட ஒரு காரணம்.(அவனிடம் சர்தார் ஜோக்குகளை சொல்வதற்கு எனக்கு மனம் வந்ததே இல்லை). ஆனால் இதிலெல்லாம் பொருந்தாத குஷ்வந்த் சிங்-கின் அக்கப்போர்-களை அவ்வப்போது,குறிப்பாக இந்த ராஜ்கபூர் உரையாடல், அன்னை இந்திரா அவர்களைப் பற்றிய விமரிசனம் ஆகியவற்றை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்து அவரை Illustrated Weekly-ன் ஆசிரியர் என்ற அளவே தெரியும்.அவர் எழுதிய புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை.என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு Blissful Sikh.

நேற்றைய Hindu-வில்,
Khushwant Singh Practished at Lahore High Court.
After 1947, he joined the foreign services and served as a diplomat for a few years in London, Paris and Ottawa. He would latter describe his years of law practicing and diplomacy as "wasted years of my Life". In 1951, Mr.Singh began his career as journalist with the All India Radio, and by 1969, joined as editor at Illustrated Weekly.

Oh Khuswant Ji, you are an enigma!

இரண்டு நாளைக்கு முன்பு, Headlines Today-ல் டிசம்பர்-2009 Recap, கோச் வித் கோயல், குஷ்வந்த் சிங் இண்டர்வியூ பார்த்துக் கொண்டிருந்த போது என் மனைவி சொன்ன வார்த்தை एक गंधा लडका.

உனக்கு பிடிக்காதது எல்லாம் எனக்கு பிடிக்குமே!


Khushwant Singh's Last Big Public interaction.

http://www.bharatnewschannels.com/headlinestoday-news-watchonline/on-the-couch-with-koel-kushwant-singhs-acid-wit-video_849c504ec.html

2003

அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்தர்! வேணா கேட்டுப் பாக்கலாமா?

வீரராகவனுக்கு அவரை எப்படியாவது TRAINING PROGRAMME-ல் பேச வைத்துவிட வேண்டும்!
கேட்டுப் பாக்கலாம் சார்! அவர் ஒகே சொன்னவுடன் பால்கிஷன் ஸாருக்கு சொல்லிக்கலாம்.
உடனே கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ ஹாஸ்பிட்டல் சென்று அவர் செக்ரெட்ரியிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்தவுடன், அவர் உள்ளே சென்று உடனே திரும்பியவர்,
ஸார், அடுத்த பேஷன்ட்டுடன் உங்களை உள்ளே வரச் சொல்கிறார்!

A MAN WITH MODESTY!

அடுத்து உள்ளே சென்றவுடன் 6 1/2' அடி உருவம், கம்பீரமாக DR.K.P. MISHRA. MD., DM (CARDIOLOGIST), நவீன காலத்து ECG-ன் தந்தை, உலக புகழ் பெற்ற இருதய நோய் நிபுணர்,எங்களுடன் உள்ளே வந்த பேஷன்ட்டை தன் அருகே அமர சொல்லிவிட்டு,

SIT DOWN GENTLEMEN! ஒரியா வாசனையுடன் ஆங்கிலம்.

வீரராகவன் சிறிது தயங்கும் போதே, I SAY YOU SIT DOWN!

A MAN OF CURT!

DR. MISHRA, பேஷன்ட்டிடம் திரும்பி, அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி-ஐ ஒரு CD-ல் இருந்து போட்டுக் காட்டி, விளக்கியவாறே,மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

வீரராகவன், ஏன் சுந்தர், முடியுமா?

பார்க்கலாம் சார்!

பேஷன்ட் எழுந்து செல்ல, உங்கள் நெஞ்சை கையில் பிடித்தவாறே இருக்க வேண்டாம், நான் தான் சரி செய்துவிட்டேனே, என்று அவரிடம் சிரித்தவாறே ஆதுரமாய் சொல்லிவிட்டு, என்னுடைய கார்டை கையில் வைத்துக் கொண்டு,

YES MR. SUNDAR!

நான் உடனே டாக்டர், எங்கள் நிறுவனத்தின் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்மில் நீங்கள் ஒரு LECTURE கொடுக்க வேண்டும்.

HOW MANY OF YOU?

நீங்கள் வர முடியுமா?

நான் தான்  நீங்கள் எத்தனை பேர் என்று கேட்டு விட்டேனே?

WHAT TOPIC?

நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்.
JOY OF WORKING, பற்றி பேசலாமா? அவரே முடித்து விட்டார்.

Thank You Doctor! இந்த தேதியில் முடியமா?

தனது மொபைல் போனின் எண்ணைக் கொடுத்து, ஒரு நாள் முன்னதாக நினைவு படுத்தினால் போதும் என்று சொல்ல,

எப்படி arrangements வேண்டும் Doctor?

இரண்டு மணி நேரம் முன்னதாக ஒரு TAXI அனுப்பினால் போதுமானது.Please note "Not a Company Car"!

ஓகே டாக்டர்!

பிறகு அவர் அன்று கொடுத்த உரையில் காலை வாக்கிங், யோகாவின் நிலைகள், சவால்களை எப்படி எடுத்துகொள்வது, உணவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை சரியாக எழுதினால்  நான் ஒரு BEST SELLER!

பிறகு விடை பெறும்போது ஒரு எண்பது பேருக்கு தான் எழுதிய "JUST A MINUTE DOC" ஜோக் புத்தகத்தை ஆட்டோக்ராப் செய்து கொடுத்து விட்டு, சுந்தர்! ECR ரோட்டில் 'கானாத்தூர்-ல் என் உதவியுடன் கட்டபட்ட ஜெகநாத் கோயிலுக்கு( replica of PURI) அனைவரையும் கூட்டிச் சென்றுவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும்! என்று சொன்னவரை,
பிறகு கோட்டுபுரத்தில் இருக்கும் வரை அதிகாலையில்  நான் சென்னை திரும்பும் நேரத்தில்,அவர்  நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததுண்டு.

Doctor! You left a rich Legacy to fellow Doctors and a common man like me!

I MISS YOU DOCTOR!

(DR. K.P. MISHRA PASSED AWAY ON 15TH MARCH 2014)