Wednesday 23 April 2014

முதலில் என்னுடைய தந்தையின் வாசிப்பு வாயிலாக , பிறகு பள்ளி பருவத்தில் "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப் படத்தில் லக்ஷ்மி, ஒய்.ஜி.பி, ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் பார்த்து பிரமித்து, அவரின்  மற்ற படைப்புகளை சிங்கார வேலனுடன் பகிர்ந்து கொண்டதும்,  நினைவுக்கு வருகிறது.என்னுடைய உணர்வில் காதல், திருமணம், சமூக அறிவு போன்றவற்றில் அவருடைய பாதிப்பும் இருக்கிறது. 90-களில் ஆழ்வார்பேட்டையில் பணி புரிந்தபோது, சிறிது தாமதமான இரவு வேளைகளில் அந்த குறுக்கு சந்துகளில் அவர் நடந்து சென்றதை பார்த்ததும் நினைவிருக்கிறது. என்னுடைய நண்பன் ரவி என்ன சார்? ஏதோ சிங்கத்தைப்    பார்ப்பது போல்  வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டதும்  நன்றாகவே நினைவிருக்கிறது.

JK பூரண நலம் பெற"வும்" வாழ்த்துகள்!