Greetings to the Legend Mr. Mahendran, Director-Mullum Malarum on 25.07.2013
2004 என்று நினைக்கிறேன், ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி ரோட்டில் என் அலுவலகத்திற்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். நான் என்னுடைய புல்லெட் மோட்டார் சைக்கிளில் வந்த படியே வணக்கம் சொன்னேன், அவரும் பதிலுக்கு சொல்ல, நான் என்னுடைய செக்யூரிட்டி-டம் வண்டியை கொடுத்து நிறுத்த சொல்லிவிட்டு வரும் வரை நின்று என்னை நலம் விசாரித்தார். இத்தனைக்கும் அதற்கு முன்னால் அறிமுகம் கிடையாது. ஒரு 5 நிமிடம் பேசியதற்கு பிறகு மரியாதை கருதி நான் விடை கொடுத்த பின்பே சென்றார். என்ன மாதிரியான மனிதத்துவம்.
இப்பொழுது பஸ்சிலும்,புகைவண்டியிலும், விமானத்திலும் கூட, ஒரு மணி நேரமோ, இல்லை, ஒரு நாளோ பயணம் செய்யும்போது கூட சக மனிதர்கள் பேசக் கூட விருப்பமில்லாமல் இறுக்கமாக இருக்கிறார்கள். அப்படி ஏதும் பேசுவதற்கு முற்பட்டால் பைத்தியக்காரன் என்றும், வேலை இல்லாதவன் என்றும் நினைத்துக் கொள்ள கூடிய காலம். நாம் அந்த காலத்தையும் திரு.மகேந்திரன் மாதிரியான மனிதர்களையும் சந்திப்பது இனி மிக அரிது.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அவரை சென்றடையும் என்ற நம்பிக்கை இந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
2004 என்று நினைக்கிறேன், ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி ரோட்டில் என் அலுவலகத்திற்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். நான் என்னுடைய புல்லெட் மோட்டார் சைக்கிளில் வந்த படியே வணக்கம் சொன்னேன், அவரும் பதிலுக்கு சொல்ல, நான் என்னுடைய செக்யூரிட்டி-டம் வண்டியை கொடுத்து நிறுத்த சொல்லிவிட்டு வரும் வரை நின்று என்னை நலம் விசாரித்தார். இத்தனைக்கும் அதற்கு முன்னால் அறிமுகம் கிடையாது. ஒரு 5 நிமிடம் பேசியதற்கு பிறகு மரியாதை கருதி நான் விடை கொடுத்த பின்பே சென்றார். என்ன மாதிரியான மனிதத்துவம்.
இப்பொழுது பஸ்சிலும்,புகைவண்டியிலும், விமானத்திலும் கூட, ஒரு மணி நேரமோ, இல்லை, ஒரு நாளோ பயணம் செய்யும்போது கூட சக மனிதர்கள் பேசக் கூட விருப்பமில்லாமல் இறுக்கமாக இருக்கிறார்கள். அப்படி ஏதும் பேசுவதற்கு முற்பட்டால் பைத்தியக்காரன் என்றும், வேலை இல்லாதவன் என்றும் நினைத்துக் கொள்ள கூடிய காலம். நாம் அந்த காலத்தையும் திரு.மகேந்திரன் மாதிரியான மனிதர்களையும் சந்திப்பது இனி மிக அரிது.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அவரை சென்றடையும் என்ற நம்பிக்கை இந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
No comments:
Post a Comment