Wednesday 6 August 2014

Ajantha---8
----------------
நமது கோயில்களில் கூட சிற்றின்பத்தில் ஈடுபட்டிருக்கும் மாதிரியான சிற்பங்கள், குறிப்பாக கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரத்தில் பார்த்திருக்கிறேன்.கோபுரம் முழுவதுமே  காமசூத்திராவின் வெவ்வேறு நிலைகள் செதுக்கப்பட்டுள்ளது.அஜந்தாவுக்கும், சாரங்கபாணி கோயிலுக்கும் நான் குறிப்பிடும்படியான அளவுக்கு என்ன தொடர்பு என்று பார்த்தால், சாரங்கபாணி கோயிலும்,அஜந்தாவும் சம காலத்தில் உருவாக்கப்பட்டது.அதாவது இரண்டுமே 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது(சாரங்கபாணி கோயில் கோபுரம் இடிபாடுகள் வெவ்வேறு கால கட்டத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம், அதனால் வாத்சாயனரின் காமசூத்திர நிலைகளை அமைத்திருக்கலாம் என்றிருந்தால் கூட வாத்சாயனரின் காலம்(Common Era) 3-ம் நூற்றாண்டு). காமசூத்ராவை ஓவிய வடிவில் இதுவரை நான் எங்கும் பார்த்ததில்லை.

அஜந்தாவில் அந்த மாதிரி எந்த சிற்பங்களும் இல்லை.ஓவியங்களும் இல்லை. ஆனால் ஆண்,பெண் அங்க லாவண்யங்கள், வடிவங்கள்,நம்மை விட திரட்சியுடன்,திடகாத்திரமாகவும்,முழு வளர்ச்சி கண்டதாகவும், அவர்கள் அந்த கால கட்டத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வஸ்திரங்கள் நம்மைவிட நாகரீகம் மிகுந்ததாகவும் இருக்கின்றன.நம்மை வெவ்வேறு உணர்வுகளுடன் பெருமூச்சை செலவழிக்க வைக்கின்றன.அந்த சிற்பிகள், ஒவியர்களின் நாகரீக உணர்வு,ஆளுமைத் தன்மை நம்மை மூர்ச்சை அடைய வைக்கின்றன,குறிப்பாக ஆற்றாமை, இயலாமை,இவைகளை வருங்காலத்தில் எவ்வாறு காத்து வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது!

அஜந்தா ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே நைஷ்டிக பிரம்மச்சாரிகளான புத்த பிஷூக்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு குறிப்பிட்ட காலம் வரை(சந்நியாசிகளாக இருக்கும்போதே)வெளி உலகத்தின் தொடர்பு அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.ஆனால் அவர்கள் சந்நியாசம் மேற்கொண்ட வயது ஒருவேளை இல்வாழ்க்கையை சுகித்திருக்கும் வாய்ப்பை தந்திருக்கலாம்.புத்த பெருமானே இல் வாழ்கையை சுகித்தவர்தானே!

குறிப்பிடும்படியான ஓவியங்களை இணைத்திருக்கிறேன்!




No comments:

Post a Comment