Showing posts with label Freindship. Show all posts
Showing posts with label Freindship. Show all posts

Saturday, 22 March 2014

2003

அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்தர்! வேணா கேட்டுப் பாக்கலாமா?

வீரராகவனுக்கு அவரை எப்படியாவது TRAINING PROGRAMME-ல் பேச வைத்துவிட வேண்டும்!
கேட்டுப் பாக்கலாம் சார்! அவர் ஒகே சொன்னவுடன் பால்கிஷன் ஸாருக்கு சொல்லிக்கலாம்.
உடனே கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ ஹாஸ்பிட்டல் சென்று அவர் செக்ரெட்ரியிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்தவுடன், அவர் உள்ளே சென்று உடனே திரும்பியவர்,
ஸார், அடுத்த பேஷன்ட்டுடன் உங்களை உள்ளே வரச் சொல்கிறார்!

A MAN WITH MODESTY!

அடுத்து உள்ளே சென்றவுடன் 6 1/2' அடி உருவம், கம்பீரமாக DR.K.P. MISHRA. MD., DM (CARDIOLOGIST), நவீன காலத்து ECG-ன் தந்தை, உலக புகழ் பெற்ற இருதய நோய் நிபுணர்,எங்களுடன் உள்ளே வந்த பேஷன்ட்டை தன் அருகே அமர சொல்லிவிட்டு,

SIT DOWN GENTLEMEN! ஒரியா வாசனையுடன் ஆங்கிலம்.

வீரராகவன் சிறிது தயங்கும் போதே, I SAY YOU SIT DOWN!

A MAN OF CURT!

DR. MISHRA, பேஷன்ட்டிடம் திரும்பி, அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி-ஐ ஒரு CD-ல் இருந்து போட்டுக் காட்டி, விளக்கியவாறே,மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

வீரராகவன், ஏன் சுந்தர், முடியுமா?

பார்க்கலாம் சார்!

பேஷன்ட் எழுந்து செல்ல, உங்கள் நெஞ்சை கையில் பிடித்தவாறே இருக்க வேண்டாம், நான் தான் சரி செய்துவிட்டேனே, என்று அவரிடம் சிரித்தவாறே ஆதுரமாய் சொல்லிவிட்டு, என்னுடைய கார்டை கையில் வைத்துக் கொண்டு,

YES MR. SUNDAR!

நான் உடனே டாக்டர், எங்கள் நிறுவனத்தின் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்மில் நீங்கள் ஒரு LECTURE கொடுக்க வேண்டும்.

HOW MANY OF YOU?

நீங்கள் வர முடியுமா?

நான் தான்  நீங்கள் எத்தனை பேர் என்று கேட்டு விட்டேனே?

WHAT TOPIC?

நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்.
JOY OF WORKING, பற்றி பேசலாமா? அவரே முடித்து விட்டார்.

Thank You Doctor! இந்த தேதியில் முடியமா?

தனது மொபைல் போனின் எண்ணைக் கொடுத்து, ஒரு நாள் முன்னதாக நினைவு படுத்தினால் போதும் என்று சொல்ல,

எப்படி arrangements வேண்டும் Doctor?

இரண்டு மணி நேரம் முன்னதாக ஒரு TAXI அனுப்பினால் போதுமானது.Please note "Not a Company Car"!

ஓகே டாக்டர்!

பிறகு அவர் அன்று கொடுத்த உரையில் காலை வாக்கிங், யோகாவின் நிலைகள், சவால்களை எப்படி எடுத்துகொள்வது, உணவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை சரியாக எழுதினால்  நான் ஒரு BEST SELLER!

பிறகு விடை பெறும்போது ஒரு எண்பது பேருக்கு தான் எழுதிய "JUST A MINUTE DOC" ஜோக் புத்தகத்தை ஆட்டோக்ராப் செய்து கொடுத்து விட்டு, சுந்தர்! ECR ரோட்டில் 'கானாத்தூர்-ல் என் உதவியுடன் கட்டபட்ட ஜெகநாத் கோயிலுக்கு( replica of PURI) அனைவரையும் கூட்டிச் சென்றுவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும்! என்று சொன்னவரை,
பிறகு கோட்டுபுரத்தில் இருக்கும் வரை அதிகாலையில்  நான் சென்னை திரும்பும் நேரத்தில்,அவர்  நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததுண்டு.

Doctor! You left a rich Legacy to fellow Doctors and a common man like me!

I MISS YOU DOCTOR!

(DR. K.P. MISHRA PASSED AWAY ON 15TH MARCH 2014)

Wednesday, 4 December 2013

30.11.2013


05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.

குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.

இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.

முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,

Suswagatham Sir!

kya Munache Ranabir?

குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு!  பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.

என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.

அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.

எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.

காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில்  ஏறிக்கொண்டான்.

ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!

இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,

 ரணபீர்! அது வேறு காலம்!
27.09.2013

அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு.
என்ன ஸ்ரீ இவ்வளவு காலையிலேயே!
இல்லை sir, நான் நள்ளிரவு 2 மணிக்கே கூப்பிடவேண்டியது,
சொல்லு ஸ்ரீதர் என்னாச்சு?
sir, KVP. ஸ்ரீனிவாசன் போயிட்டான் sir!
சிறிது நேரம் ஆயிற்று , நான் என்னுடைய சுயநிலைக்கு வருவதற்கு.
sir, நினைவிருக்கிறதா? நாங்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன் ஒரே நாளில் தான் உங்களுக்கு ரிப்போர்ட் செய்தோம்.
ஆமாம் ஸ்ரீ. ஞாபகம் இருக்கிறது!
ஸ்ரீதர், நான் ஒரு 6 மணிக்கு ரெடியாக இருக்கிறேன். மற்றவர்களிடமும் சொல்லிவிடு!எல்லோரையும் PICK-UP செய்து கொள்ளலாம்.

ஸ்ரீதர் வரும்வரை KVPS-ன் நினைவுதான்.

 KVPS-க்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஹோசூர் வரை Juristiction. நான் KVPS -ஐ அழைத்துக்கொண்டு Launch செய்ய Slide Projector, Product samples, ஒரு வாரத்திற்கான மற்ற ஆயத்தங்களுடன் இட்டாண்டஹள்ளி, ஜிட்டாண்டஹள்ளி எல்லாம் தாண்டி காலை ஹோசூர் போய் நள்ளிரவு கிருஷ்ணகிரி வந்து அத்தனை சுமைகளுடனும் ரூம் போட்டாயிற்று.
அடுத்தநாள் காலை முதல் Appointment-லேயே projector சொதப்ப, அதை மூடவே முடியாத மாதிரிக்கு  KVPS கையில் ஏந்திக்கொள்ள lodge-க்கு ஊர்வலம் கிளம்பினோம்.

இடையில், நான் ஸ்ரீனி நீ  lodge-க்கு போய் பில்  செட்டில் செய்து ரெடியாகு, நான் சின்ன தலைவரிடம் Trunk call புக் பண்ணி சொல்லிவிட்டு,  வேறு  Projector-ஐ
சேலத்தில் கொண்டுவந்து  கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கிருபாச்சாரியர்.வீரராகவன்-ஐ லைனில் பிடித்தால்
சுந்தர்!வெற்றி செய்தி எதாவது இருந்தால் சீக்கிரம்  சொல்லு! இங்கே எனக்கு சூட்டில்  கொப்புளம் வந்துவிடும் போலிருக்கிறது என்றார். அப்புறம் இங்கே நடந்தவற்றை சொல்லி குளிரப்பண்ணி, அன்றிரவே ஹரி-ஐ சேலம் old Railway ஸ்டேஷன் அருகே எங்களுடைய ஆஸ்தான Raj Bhavan-ல் சென்னயிலிருந்து Projector-ஐ கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடு செய்து ரூமிற்கு திரும்பினால்   KVPS லாட்ஜ் வாசலில் Projector-ன் மேல் ஒரு வேஷ்டியை போட்டு மூடி ஏதோ போல்  ஏந்திக் கொண்டிருந்தான். என்னடா ஸ்ரீனி என்று கேட்டால், இல்லை அப்படியே கொண்டுபோனால் TTS வேலை தீர்த்துவிடுவார் என்று சொல்ல இருவரும் சேலம் திரும்பிவந்தது மாவீரன்.அலெக்ஸாண்டர் பாபிலோன் வந்ததற்கு இணையானது.

பிறகு மற்றொரு  Projector-டன் கிருஷ்ணகிரி சென்று பேருந்து நிலையத்தின் அழகை கண்டு கழித்து, காலையில் இட்லி, தோசை கிடைக்காமல் பரோட்டா-விற்கு பால் ஊற்றி சாப்பிட்டு, அடுத்த முறை வரும்போது கேனில் தண்ணீர் கொண்டுவரவேண்டும் என்று சங்கல்பத்தை எடுத்துக்கொண்டதும், மறுபடியும்  Projector-ன் built-in screen ரிப்பேராக அதே வேஷ்டியை திரை சீலையாக மாற்றி 15 நாட்களுக்கு ஒப்பேற்றி பிறகு சேலம் திரும்பியது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை.

எனக்கு சென்னை உயர்பதவிக்காக மாற்றம் கிடைத்தவுடன் KVPS தன் சேலம் வேலையை விட்டு விட்டு  எங்கோ போய்விட்டான். இரண்டு, மூன்று மாதம்  கழித்து ஒரு நாள் மதியம் ரிஷப்ஷனிஸ்ட் ராஜி,  sir,உங்களுக்கு போன் என்றவுடன் KVPS எதிர்முனையில், ஸ்ரீனி எங்கடா போயிட்ட? என்றால், இல்லை sir, எனக்கு எல்லோரிடமும் வேலை பார்க்க முடியாது என்றான்.

மறுபடியும் ஒரு இரண்டு ஆண்டு கழித்து இரவு வேலை முடிந்து வீடு திரும்பினால் KVPS டிபன் சாப்பிட்டு கொண்டிருக்க, என் இல்லத்தரசி KVPS மறுபடியும் வந்துவிட்டார் என்றாள்! பிறகு கிளம்பும்போது ஸ்ரீனி பணம் ஏதும் வேண்டுமாடா? என்றால் வேலை வாங்கிக் கொடுங்கள் என்றான். துரோனச்சாரியார் பால்கிஷன் சாரிடம் சொல்லி அவருடைய இன்னொரு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்த சில மாதங்களுக்கு பிறகு அங்கிருந்தும் சில மாதங்களில் எங்கோ போய்விட்டான். மிகவும் நல்லவன்,யாருக்கும் தொந்திரவு கொடுக்காத உத்தமமான ஆத்மா.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, ஸ்ரீதர் காரோடு வெளியே நின்று கொண்டிருந்தான். sir, KVPS 2 மணிக்கு மாரடைப்பால் காலமாயிட்டான் என்று சொல்ல, நான் "நல்லவனுக்கு அழகு சொல்லாமல், கொள்ளாமல் போவது"  என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தேன்.

இம்முறை KVPS எங்கு போயிருக்கிறான் என்று தெரியும்!
03.05.2013

மறதி

யானை   - எப்போதும் இல்லை
நாய்         - எப்போதாவது
மனிதன் -  எப்போதுமே!

இதை உண்மையாக்க 31  வருடம் கழித்து  வந்தான் எனது பால்ய சிநேகிதன் .

கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி என் மீட்டிங் அறையில் 5 மேனேஜர்கள் சமேதராக, இவ்வருடTarget-யாவது வென்றடைய பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தபோது வந்த முதல் அலைபேசி அழைப்பை Silent-ல் போட்டு விட்டு தொடர்ந்தபோது,  அடுத்து  வந்த தொலைபேசி  அழைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.அழைப்பை ஏற்ற உடன் அம் முனையிலிருந்து நீங்கள் மீனாக்ஷிசுந்தரம்(என்னுடையபூர்வாசிரமப்பெயர்) தானே? நான் தியாகு கரூர்-ல் இருந்து பேசுகிறேன். உங்களுடன் 8-ம் வகுப்பில்1978-ம் வருடம் படித்தேன், இவ்வாறு ஒரு முனையில் அவர் தொடர்ந்து பேச அனுமதித்து விட்டு நான் சுதாரித்து கொள்ளப் பார்த்தும்  என்னால்  முடியவில்லை. மேலும் எங்களு டைய சம்பாஷணைகளை கீழ் கண்டவாறு தொடர்ந்தபோதும்,

தியாகு: நம் கிளாஸ் டீச்சர்  குளோரி மரகதம்!
நான்       : ஆமாம்
தியாகு:நீங்கள் கூட சதாசிவத்தின் சைக்கிளை  பிடுங்கி வைத்துக் கொள்வீர்கள், நான்  தான் சமாதானம்    செய்து வைப்பேன்.
நான்  : அப்படியா?
தியாகு :நீங்கள் கூட கையெறி பந்தினால் என் இடது முதுகில் என்னை அடித்த வடு இன்னும் இருக்கிறது.
நான் : அப்படியா ? (சரியான தீவிரவாதியாய் இருந்திருப்பேன் போலிருக்கிறது)
தியாகு : நான் கூட உங்களை நீங்கள் படித்த கல்லூரி விடுதியில் வந்து சந்தித்தேனே!
நான்  :அப்படியா?
தியாகு :நீங்கள் புதுகோட்டை-க்கு குடி பெயர்ந்த போது நான் மேல ரத வீட்டில் வந்து  சந்தித்தேனே!
நான் :அப்படியா?
தியாகு : உங்கள் இளைய சகோதரர்  மனோகர்  எப்படி  இருக்கிறார்? அம்மா அப்பா   எப்படி  இருக்கிறார்கள்  ?
நான் : எல்லோரும் நன்றாக  இருக்கிறார்கள், நான் இந்த 10-ம் தேதி வியாபார அலுவலுக்காககரூர் வருகிறேன், கட்டாயமாக உங்களை சந்திக்கிறேன்  என்று எனக்கே என் மேல் முதல்முறையான பரிதாபத்துடன், தியாகு-வுக்கு பிரியாவிடை கொடுக்க நேர்ந்தது. இவ்வளவுக்குப் பின்னரும் அவரை எனக்கு தெரிந்து கொள்ள முடியவில்லை . அந்த மாலை, இரவு முழுவதும்முதன் முறையாக எனது மூளை-யை கசக்கிய போதும் அவரை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல் உறங்கிப் போய்விட்டேன்.

எனது பள்ளித்தோழன் GT, கோகுலக் கண்ணன் நிறத்தைப் பெற்றவனாக இருந்தாலும், நல்லகளையும், வடிவும் உள்ளவன், மேல் உதடும் மூக்கும் சந்திக்கும் இடம் நல்ல அழுத்தத்துடன்அவன் புன்னகையை கூடுதலாக்கும்.

கண்கள் இரண்டும் நல்ல பளபளப்புடன் எப்போதும் ஒரு தேடலுடன் கூடியது, தலை நல்லதேங்காய்எண்ணெய் தடவி படிய வாரி, சுத்தமான உடை உடுத்தி, எப்போதும்உற்சாகமும் சாந்தமும் உடையவன். அவனுடைய பள்ளிச் சீருடையில் கால்ச் சட்டை மட்டும்இருவர் போட்டுக் கொள்ளும்படி இருக்கும். அதே போல் தேசிய மாணவர் படை சீருடையும்அவனுக்கு  அப்படியே வாய்த்திருந்தது.

அவனுடைய பின்னந்தலையில் ஒரு முடிக் கற்றை மட்டும் படியாமல் அவன் எங்குஇருந்தாலும் பின் புறம் பார்த்தால் கூட உடனே சொல்லக் கூடிய அடையாளம். அவன் குறும்பன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அவனை GT என்றே கூப்பிடுவோம், ஏனென்றால் அப்பொழுது GT என்றால் மல்தா அல்லது ஆட்டையை போடு என்ற ஒரு" ஸ்லாங்: இருந்தது. அவன் எவ்வளவு ஆட்சேபித்தாலும் அவனை GT என்று சொல்லி வெறியேற்றுவதில் எங்களுக்கு ஒரு அளவில்லாத ஆனந்தம். சடாரென்று கனவு கலைந்து எழுந்த நான் சற்று சுதாரித்தவுடன் இந்த GT -தான் நேற்று மதியம் தொலை பேசியில் என்னை தன் அன்பால் ஆட்கொண்ட G.தியாகராஜன் என்று உணர்ந்தேன்.

பிறகு அந்த 10-ம் தேதி அவனுடனும் எனது மற்றொரு பள்ளித் தோழன் சதாசிவமும், கரூர், திருவள்ளுவர் விடுதியில் இரவு உணவருந்தி, கூடிக் குலாவினேன்என்று  சொல்லவும் வேண்டுமோ! இப்பவும் GT-ன்  பின்னந்தலை முடிக் கற்றை அப்படியே இருக்கிறது.

காலம் எவ்வளவு தூரம் நம்மை தள்ளிச் சென்று விடுகிறது!