Showing posts with label Tour. Show all posts
Showing posts with label Tour. Show all posts

Saturday, 10 May 2014

6th May 2012
Mangalore.

மொபைல் அதிர்கிறது!
சிங்காரவேலன் அழைக்கிறான்!
என்னப்பா? சொல்லு.

சுந்தர் எங்கப்பா இருக்க?
நான் உனக்கு எதிர்கோடியில்!
FM கரியப்பா ரோட்டிலா?
இல்லை இல்லை, மங்களூரில்!

தம்புடு சொல்லுடா!என்ன விஷயம்!

I am Counting my days-பா!

என்னப்பா இப்படி சொல்ற, என்னாச்சு?

இல்லை, பெங்களூர்-ல் இருந்து கிளம்ப நேரம் வந்சிருச்சு!
சென்னையிலேயே வேற வேலை!

அப்படியா? அங்கே சும்மா ஆபீஸ்-ல் பென்ஷன் தானே வாங்கிட்டிருந்த!

சரி! நான் பெங்களூர்லிருந்து கிளம்புவதற்கு முன் நாம "நடந்தாய் வாழி காவேரி"(சிட்டி&தி.ஜா) புத்தகம் படி நதி ஒரமாகவே பயணம் செய்யனும்னு சொல்லிட்டிருந்தாயே!

சரி!கிளம்பிடுவோம்!

தம்புடு! நான் மங்களூரிலிருந்து 9-ம்தேதி காலை சிருங்கேரி வந்துவிடுகிறேன்! அங்கிருந்து மடிக்கேரி  போயிடலாம்!

"குடகு"லிருந்து சிவசமுத்திரம் வரலாம்னு சொல்றியா? என்னப்பா தலைகீழாக  டிராவல் பண்ணுவதா??!!

Wednesday, 7 May 2014

9th April 2006
A Day of Fugitive

போலாம் சார்!
ஆனால் நீங்கள் Rayban போடக்கூடாது!
செயின், மோதிரம் போடக் கூடாது!
Rolex கட்டக் கூடாது!
லூயி பிலிப் pant, Shirt போடக்கூடாது!
பங்கஜ் அடுக்கிகொண்டே போக,
ராஜீவ்-ஐ பார்த்து, பங்கஜ் என்னை  கஷாயம் உடுத்த சொல்கிறான் என்று சொன்னதற்கு,
ராஜீவ் பதிலாக,
ஆமாம் சார், நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் சந்தனம்,குங்குமமே உங்களை மதராஸி என்று காண்பித்து கொடுத்துவிடும் என்றான்.

இடையில் ஜஹானபாத் நம்முடைய திண்டுக்கல் போல் பூட்டுக்கு பிரசித்தி பெற்றது, ரொம்ப விசேஷமான ஊர். மொத்த வடக்கு,வட கிழக்கு மாநிலங்களுக்கு கிரிமினல்களை அனுப்பி வைக்கும் ஊர். இரண்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து மெயின் ரோட்டுக்கு சுரங்கம் தோண்டி ஒரு 20 பேர் தப்பித்து விட்டார்கள். அந்த இடத்தை தாண்டுவதுதான் மிகவும் ஆபத்தானது!ஆள் கடத்தலும் ஜாஸ்தி!முதல்ல உங்களைத்தான் தூக்குவாங்க! எப்படி சார் வசதி! அமர்தீப் சின்ஹா வேறு ரொம்ப பயமுறுத்தினான்!

ஏம்பா!  எவ்வளவு பேர் போயிட்டு வர்றாங்க! map-ல பார்த்தேனே,NH 83 என்று வேற இருந்ததே?

இல்ல சார், எல்லோரும் மொத்தமா டூரிஸ்ட் மாதிரி போனா பிரச்சினை இல்லை, சென்னை மாதிரி நிறைய பஸ்களும் கிடையாது!ரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதி! என வேறு அந்த பட்னா Regional Manager நாராயணன் பயமுறுத்தினார்.

என்ன நாணா ! அப்புறம் எப்படி நம்ம ஞானம் பெறுவது?

ஒண்ணு செய்வோம் சார்! டாக்ஸி எடுத்திட்டு போயிட்டு இரவே திரும்பிவிடுவோம்! தாமோதர் சிங்கை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் அவர் கயா வேலையை பார்த்துக் கொள்வார்!

பங்கஜ் போய் வேண்டுமென்றே ஒரு ஓட்டை டாக்ஸியா பார்த்து எடுத்துக்கொண்டு வர, நான், நாணா, பங்கஜ், ராஜீவ், அமர்தீப், தாமோதர் சிங் ஆகியோர் எங்கள் புனித பயணத்தை துவங்கினோம்.
கிளம்பும் போதே எப்போதும் போல் காலை மணி 11. கார் ட்ரைவர் பங்கஜ்க்கு மிகவும் தெரிந்தவர். எங்களுடைய ரோலர் கோஸ்டர் பயணம் ஆரம்பிக்க  மோசமான காருக்கும், மோசமான செம்மண் ரோட்டுக்கும் நடந்தது ஒரு துவந்த யுத்தம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒரே புழுதி.காருக்குள்ளும் தான்!

அப்படி இப்படி என்று ஜகானாபாத் தாண்டும்போது ஒரு கஷ்டமும் இல்லாமல் கடந்து, மாலை சுமார் 4 மணிக்கு போதியை அடைந்து, புத்தம் சரணம், கச்சாமி சொல்லி,புல்லரித்து மெய்சிலிர்த்து, அங்கிருந்து நம் வீட்டிற்கெல்லாம் பேசி நீங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்ல,எல்லோரும் நீ புண்ய ஆத்மா தான் என்று வாழ்த்த, நேரம் கடந்து கொண்டிருந்தது.

அங்கிருந்து ஒரு 25 KM  தொலைவில் உள்ள விஷ்ணுபாத் சென்று, விஷ்ணுவின் பாதங்களுக்கு நாமே பூஜை செய்யலாம் என்பதால், அங்குள்ள பண்டிட்களின் உதவியுடன் பூஜை செய்துவிட்டு, திரும்ப வந்து,விட்டுப்போன"பால்கு"நதியை தரிசித்து முடிக்கும்போது 6 மணி.
நாணா, சார் பேசாமல் இங்கே இன்று தங்கிவிடலாம் என்று சொல்ல, பங்கஜும், கார் டிரைவரும் இல்லை! இல்லை! எவ்வாறாவது பட்னா திரும்பவேண்டுமென சொல்ல, திரும்பவதாக தீர்மானித்தோம்!

சரியாக பங்கஜ் ஆரம்பித்தான், சார்! நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை! குறிப்பாக டிரைவருக்கு பீடா போட்டாதான் கார் ஓட்டவரும் என்று சொல்ல, பீடா கடையை தேடி போனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்தக் கடையை முற்றுகை இட்டு இருந்தனர். ஒரு வழியாக எல்லோரும் பீடா போட்டு, பூமியை சிவப்பாக்கி கிளம்பும்போது,இரவு 7 மணி!

மறுபடியும் பங்கஜ் ஆரம்பித்தான்! நாம் ஜகானாபாத் நெருங்குவதால், எல்லோரும் சட்டையை கழற்றி கொள்ளலாம் என, எல்லோரும் சட்டையை கழற்றிக் கொண்டு, வேர்வையில் குளித்து, பனியனுடன் காரினுள் அமர்ந்து இருந்தோம்!பங்கஜ் பிறகு எல்லோருக்கும் இன்னொரு ரவுண்டு பீடா தர, எங்களுக்கு அவன் ஒரு Nativity கொண்டு வர முயற்சிக்கிறான் என்று தெரிந்தது.ஜகானாபாத் மக்களிடம் அவ்வளவு பயம்!

ஒருவாறு நாங்கள் மஹா நிர்வாணம் அடைந்து  பட்னா திரும்பியபோது இரவு 11மணி.

மனிதன் ஆசையை துறந்தால், ஏது இவ்வளவு அவஸ்தை!

உயிர் மேல் ஆசை இல்லாமல் எப்படி?

நாங்கள் போய்வந்த இடம் புத்த கயா.

பின்குறிப்பு
____________
தலையில் துணி கட்டியவாறு இருப்பவர்தான் பங்கஜ். முகத்திலேயே குறும்பு கொப்பளிக்கும்.ஒரு வாரத்திற்கு முன் பேசும்போது, சார்!இப்போது அவ்வளவு கடத்தல் பயம் இல்லை, மேலும் அப்போது லாலு வேறு இருந்தார்.ரோடுகள் கூட நன்றாக போட்டுவிட்டனர் என்றார். எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்!