Saturday 22 March 2014

2003

அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்தர்! வேணா கேட்டுப் பாக்கலாமா?

வீரராகவனுக்கு அவரை எப்படியாவது TRAINING PROGRAMME-ல் பேச வைத்துவிட வேண்டும்!
கேட்டுப் பாக்கலாம் சார்! அவர் ஒகே சொன்னவுடன் பால்கிஷன் ஸாருக்கு சொல்லிக்கலாம்.
உடனே கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ ஹாஸ்பிட்டல் சென்று அவர் செக்ரெட்ரியிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்தவுடன், அவர் உள்ளே சென்று உடனே திரும்பியவர்,
ஸார், அடுத்த பேஷன்ட்டுடன் உங்களை உள்ளே வரச் சொல்கிறார்!

A MAN WITH MODESTY!

அடுத்து உள்ளே சென்றவுடன் 6 1/2' அடி உருவம், கம்பீரமாக DR.K.P. MISHRA. MD., DM (CARDIOLOGIST), நவீன காலத்து ECG-ன் தந்தை, உலக புகழ் பெற்ற இருதய நோய் நிபுணர்,எங்களுடன் உள்ளே வந்த பேஷன்ட்டை தன் அருகே அமர சொல்லிவிட்டு,

SIT DOWN GENTLEMEN! ஒரியா வாசனையுடன் ஆங்கிலம்.

வீரராகவன் சிறிது தயங்கும் போதே, I SAY YOU SIT DOWN!

A MAN OF CURT!

DR. MISHRA, பேஷன்ட்டிடம் திரும்பி, அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி-ஐ ஒரு CD-ல் இருந்து போட்டுக் காட்டி, விளக்கியவாறே,மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

வீரராகவன், ஏன் சுந்தர், முடியுமா?

பார்க்கலாம் சார்!

பேஷன்ட் எழுந்து செல்ல, உங்கள் நெஞ்சை கையில் பிடித்தவாறே இருக்க வேண்டாம், நான் தான் சரி செய்துவிட்டேனே, என்று அவரிடம் சிரித்தவாறே ஆதுரமாய் சொல்லிவிட்டு, என்னுடைய கார்டை கையில் வைத்துக் கொண்டு,

YES MR. SUNDAR!

நான் உடனே டாக்டர், எங்கள் நிறுவனத்தின் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்மில் நீங்கள் ஒரு LECTURE கொடுக்க வேண்டும்.

HOW MANY OF YOU?

நீங்கள் வர முடியுமா?

நான் தான்  நீங்கள் எத்தனை பேர் என்று கேட்டு விட்டேனே?

WHAT TOPIC?

நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்.
JOY OF WORKING, பற்றி பேசலாமா? அவரே முடித்து விட்டார்.

Thank You Doctor! இந்த தேதியில் முடியமா?

தனது மொபைல் போனின் எண்ணைக் கொடுத்து, ஒரு நாள் முன்னதாக நினைவு படுத்தினால் போதும் என்று சொல்ல,

எப்படி arrangements வேண்டும் Doctor?

இரண்டு மணி நேரம் முன்னதாக ஒரு TAXI அனுப்பினால் போதுமானது.Please note "Not a Company Car"!

ஓகே டாக்டர்!

பிறகு அவர் அன்று கொடுத்த உரையில் காலை வாக்கிங், யோகாவின் நிலைகள், சவால்களை எப்படி எடுத்துகொள்வது, உணவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை சரியாக எழுதினால்  நான் ஒரு BEST SELLER!

பிறகு விடை பெறும்போது ஒரு எண்பது பேருக்கு தான் எழுதிய "JUST A MINUTE DOC" ஜோக் புத்தகத்தை ஆட்டோக்ராப் செய்து கொடுத்து விட்டு, சுந்தர்! ECR ரோட்டில் 'கானாத்தூர்-ல் என் உதவியுடன் கட்டபட்ட ஜெகநாத் கோயிலுக்கு( replica of PURI) அனைவரையும் கூட்டிச் சென்றுவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும்! என்று சொன்னவரை,
பிறகு கோட்டுபுரத்தில் இருக்கும் வரை அதிகாலையில்  நான் சென்னை திரும்பும் நேரத்தில்,அவர்  நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததுண்டு.

Doctor! You left a rich Legacy to fellow Doctors and a common man like me!

I MISS YOU DOCTOR!

(DR. K.P. MISHRA PASSED AWAY ON 15TH MARCH 2014)

No comments:

Post a Comment