Thursday 8 May 2014


சிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று சொல்வதிலே உரிமையும், இனிமையும் கலந்து பிரிக்க முடியாதவன் என்ற ஒரு உணர்வு இருக்கும். நாங்கள் இருவரும் 11,12,13 May 2012-ல், நடந்தாய் வாழி காவிரி(தி.ஜா-வின் வழிகாட்டுதலோடு), காவிரி தோன்றும் இடத்திலிருந்து, சிவசமுத்திரம் வரை ஒரு இண்டிகா காரில் ஓட்டுனர் நாகேஷ் உதவியுடன் பயணம் செய்தபோது, தம்புடு, பெங்களூரு ஆபிசில் உட்கார்ந்து வெட்டிக்கு புஸ்தகம்தானே படித்துக் கொண்டிருக்கிறாய், எனக்கு படிப்பதற்கு ஏதாவது suggest பண்ண முடியுமா என்று கேட்டதற்கு, நீ திரும்ப சென்னை போவதற்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவன் எழுதிய Covering லெட்டெர்,

Singaravelan Baladandayutham
To Me
6 Jun 2012

hi dear

பொஸ்தக பரிந்துரை கேட்டில்ல. ம்ம் இதத்தான் விதின்னு சொல்வாங்க.
படி. மொந்த மொந்தையா   கள்ளு குடிச்ச மாதிரி இருக்கும்

அப்பனே படிச்சுபொலம்பி, விருவிதுர்த்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, ரசிச்சு சிரிச்சு  கெட்டுப்போ.

படிக்க படிக்க -

இருவது / இருவத்தஞ்சு வருஷம் வீணடிச்சாச்சுனு   தோணும்.
அப்பன் ஆத்தாள வைய தோணும் (நல்ல பொஸ்தகத்தலாம் நமக்கு அறிமுகபடுத்தத் தெரியலேயே)    
குபுகுபுன்னு மோட்டுவளைய பாத்து பொக விடத் தோணும்
மழைல நனையத்  தோணும்
வெயில்ல நடக்கத்  தோணும்
இவ்ளோ பறவ பூவு இருக்கா -  பறவ புவ பேருலாம் தெரியலைனு தோணும்
தண்ணியடிக்கும் போது  அப்பளம் தான் சரியான சைடு டிஷ்ணு  தோணும்

இன்னும் நெறைய தோணும்!

அங்ஙனம்  தோண வாழ்த்துக்கள்

 அன்புடன்
தம்புடு

No comments:

Post a Comment