Sunday 30 August 2015

மெட்ராஸ் (376th year-22nd August 2015)
--------------------------------
கால் வைத்தவுடன் கடல் நீர் நம் கால்களை வந்து மோதி பாதங்களின் கீழே மணலை அரித்து, கடல் நீர் பரப்பை வெறித்து நோக்கும்போது, நாம் அப்படியே தண்ணீரில் இழுத்துச் செல்லப்படும் "Science of Stupidity" போல்
என்னுடைய மனதும்  மெட்ராஸ் நினைவுகளில்  நழுவுகிறது!..

ICF காலனி (East), இருமருங்கிலும் மரங்கள் கவிந்த கம்பன் அரங்கம், Club House, அயனாவரம்,புரசைவாக்கம் தாண்டியறியாத வயதில், முதன் முதலாக மெரினாவில் கால்கள் பாவியதும், தகப்பனாரும், தாய்மாமனும் கடல் நீரில் நின்றுகொண்டு என்னை அலேக்காக தூக்கி எறிந்து விளையாடியதும், தாஸப்ரகாஷ்-ல் ஐஸ் கிரீம் சுவைத்ததும் மறக்க இயலாது.

சபையரில் "36th Chamber of Shaolin" ஈகாவில் "Exorsist" திரைப்படங்கள்  பார்த்துக் கொண்டிருந்த போதே, திடீரென்று வயதாகி, வெறுமென விடுமுறைக்கு மட்டும்
சென்னைக்கு  வருவதும், கல்லூரிப் படிப்பு முடித்து,ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் உத்தியோக நேர்முகத் தேர்வில், கூடவே பிறந்த வறட்டு பிடிவாதமும், கௌரவமும் சில நெளிவு சுழிவுகளுக்கு இடம் கொடுக்காததால் , வெற்றிபெற முடியாமல், மனம் நொந்து, போயஸ் கார்டன் -ல் இருந்து சைதாப் பேட்டைக்கு நடந்தே வந்த போது, இனி சென்னைக்கு வரவே கூடாது! என்று முடிவெடுத்ததும், "விதி வலிது" என்ற கோட்பாட்டின் படி சுமார் 20 வருடங்கள் அதே சென்னையின் வலிய கரங்களால் சீராட்டபட்டு, பொருளாதார வசதியில் மேம்படுத்தப்பட்டு, ஒரு செலிபிரிட்டி அந்தஸ்துக்கு உயர்ந்ததும் நிதர்சனம்!

இப்போதும் "மெட்ராஸ்காரவிங்க வீடு" என்று அடையாளம் காட்டப் படும்போது மனதில் தோன்றும் நெகிழ்ச்சியை விவரிக்க முடியாமல்...

"நானும் மெட்ராஸ்காரன்தான்" என்று உரக்க கூவி மனம்
மகிழ்ச்சியில் திளைக்கிறது!

No comments:

Post a Comment