Sunday 30 August 2015

Happy 69th Independence Day!

என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்! நமது தேசத்திற்காக எல்லையில் பணி புரிவது தான்  எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுக்கிறது! உங்களுடைய மருமகளுக்கு இந்த நேரத்தில் மகாபாரதத்தையும், இராமயணத்தையும் நேரம் கிடைக்கும் போது சொல்லி வாருங்கள்!ஒரு வேளை நான் இந்த கார்கில் போரில் இருந்து திரும்பி வராவிட்டாலும் இன்னுமொரு வீரத்துடன் கூடிய குழந்தை இந்த தேசத்திற்கு கிடைக்கட்டும் என்று தன் பெற்றோருக்கு எழுதியவர் அடுத்த நான்கு நாட்களில் போரில் வீரமரணம் அடைந்து விட்டதாக "இந்தியா டுடே-யில் படித்ததையும்....

குடியரசு தினத்தை ஒட்டி ராஷ்ட்ரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு விருதுகள் வழங்கும்போது, மிகுந்த துக்கத்துடன், கட்டுபடுத்தமுடியாத கண்ணீருடன் மருகினாலும் அமைதியாக சபை நாகரீகத்துடன், விருதுகளைப் பெற்றுச் செல்லும் குடும்பத்தினரையும்...

ஆகஸ்ட் 14, 2001, கொல்கத்தாவில் "பார்க் சர்க்கஸ்" பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில்  "பாகிஸ்தானின் சுதந்திரதினம்" கொண்டாடப் பட்டபோது சகிப்புத் தன்மையுடன் அமைதி காத்த அத்தனை பெங்காலிகளையும்....

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் தீவிரவாதிகளை தொடர்ந்து முறியடித்து வரும் காவல்துறை, The Rapid Action Force (RAF)...

விருதுநகர் மாவட்டத்தின் "பெருமாள் தேவன்பட்டி"யிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தவறாமல் இந்திய இராணுவத்தில் பணிபுரிய தங்களது குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் பெருமைமிகு பெற்றோர்களையும்....

நன்றியுடன் நினைவு கூறுவேன்!

Wishing you all a Happy 69th Independence Day!

No comments:

Post a Comment