Wednesday 6 August 2014

Ajantha--10
-----------------
அந்த ஓவியங்களை இந்த முறை வேறுவிதமான, பக்குவப்பட்ட (என்றுகூட சொல்லலாம்),மனோநிலையில் தரிசிக்கும்போது என்னுடைய காதுக்குள் மட்டும் கீழ்க் கண்ட வரிகள் என்னை வேறு உலகத்துக்கும், ரசிக்கும் நிலையை வேறொரு உயரத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

காலத்தை வென்றவரின் எழுத்துகள்....
காலத்தை வென்ற படைப்புகளை தேடி அறியும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது...

அந்த அற்புதமான இரகசியத்துக்கு உலகில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத இரகசியத்துக்கு-என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே!நீ நன்றாக இருக்க வேண்டும்! சொல்கிறேன் கேள்!
மரஞ் செடிகளின் இலை ,வேர், காய், விதை முதலிய தாவரப் பொருள்களைச் சாறுபிழிந்து காய்சிச் சாதரணமாக வர்ணங்கள் குழைப்பது வழக்கம். தாவரப் பொருள்கள் காய்ந்து, உலர்ந்து அழிந்து போகக் கூடியவை.  ஆகையால் அவற்றிலிருந்து  உண்டாக்கப்படும் வர்ணங்களும் சீக்கிரத்தில் மங்கி அழிந்து போகின்றன.ஆனால், மலைகளிலும் பாறைகளிலும் சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன. இந்த வர்ணங்கள் காற்றுக்கும், வெயிலுக்கும்,மழைக்கும் மங்குவதில்லை.அழிவதில்லை.ஆகவே இந்த வர்ணப் பாறைகளை பொடி செய்து அதற்கேற்ற பக்குவப்படி அரைத்துக் குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது.இம்மாதிரி வர்ணப் பாறைகளைப் பொடித்துக் குழைத்த வர்ணங்களைக் கொண்டுதான் அஜந்தாவின் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன...பரஞ்சோதி!அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிஷூக்களைத் தவிர வேறு யாரும் அறியாத பரம இரகசியத்தை உனக்கு நான் சொல்லிவிட்டேன் என்று நாகநந்தி சொல்வதாக கல்கியின் வார்த்தைகள்....

அடுத்த பதிவுகள் முழுக்க முழுக்க என்னுடைய உணர்வுகள், என்னுடைய வார்த்தைகளில் பதிய விழைகிறேன். அஜந்தா ஓவியங்களை விவரிக்கும்போது கல்கியின் எழுத்துகளை தாண்டிசெல்வது அவ்வளவு எளிதானதல்லவே!

இங்கே கொடுத்திருக்கும் ஓவியங்களில் சூரிய வெளிச்சமோ, அல்லது டார்ச் லைட்டின் வெளிச்சமோ படும்போது அது என்ன மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றன என்று அறியும்போது, 2000-ம் வருடங்களுக்குப் பிறகும் இந்த ஓவியங்கள் நமக்காக காத்திருக்கின்றனவா? அல்லது நாம் இவ்வளவு சீக்கிரம் உணரும் பாக்கியம் செய்திருக்கிறோமா என்று நினைத்து பார்க்கும்போது அடையும் பிரமிப்பில் பலமுறை மூச்சு விட மறந்து நின்றது என் நினைவில் இருந்து என்றைக்கும் அழியாது!

I am out of the World!
Celestial........




No comments:

Post a Comment