Wednesday 6 August 2014

Ajantha--3
----------------
இதற்கு முன்னால் அங்கு இரண்டு முறை சென்றிருந்தும், தேனிலவு சென்று  வந்தவர்களிடம் அங்கு என்ன பார்த்தீர்கள்? என்று கேட்டால், அவர்கள் என்ன பதிலை சொல்வார்களோ, நானும் அதைத்தான் பகிர்ந்து கொண்டதாக நினைவு! இந்த முறை 20 வருடம் கழித்து செல்வதால், ஒரு பத்ம வியூகம் அமைப்பதற்கு தேவையான அத்தனை முன்னேற்பாடுகளுடன் சென்றது காலத்தினால் அழியாத(?)நினைவுகளையும், சரித்திர புருஷர்கள் உலவிய இடங்கள் எது, எங்கு என்று தேடி, உணர்ந்து திரும்ப முடிந்தது.

ஏன் எல்லோரா அவ்வளவு உசத்தி இல்லையா? என்றால், எல்லோரா 5-ம் நூற்றாண்டில்தான் உருவாக்கப் படுகிறது.மேலும் ஹிந்து, பெளத்த, மற்றும் ஜைன கோட்பாடுகள் கூடிய கலவை!

ஆனால் அஜந்தா, முதலாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை, மிக நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக புத்த மதத்தினரால் மட்டும் குடை வரை பெற்றது. மேலும் சளுக்கிய இளவரசர்கள் நீலகேசி(நாகநந்திபிஷூ), புலிகேசி ஆகியோர் இந்த மடாலயங்களில் பயின்று, புத்த குருமார்களின் உதவியோடு அரசு அமைக்க முடிந்திருக்கிறது!

என்னுடைய புகைப்பட நிபுணத்துவம் பெற்ற நண்பர்கள்,மற்றும் Archaeological Survey of India, Rajesh Singh ஆகியோர் வெளியிட்ட  புத்தகங்கள் மூலம் நிறைய தகவல்கள் பெற முடிந்தது!




No comments:

Post a Comment