Wednesday 6 August 2014

Ajantha--7
---------------
மொத்தம் முப்பது குகைகள் என்றாலும் சுமார் 25 குகைகளுக்குள் செல்வதற்கு மட்டுமே அனுமதி.எல்லா குகைகளிலும் சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் அதனுடைய Stability, காலத்திற்கேற்ப, பாரமரிப்புக்கேற்ப வேறுபடுகின்றன.

முதலில் 28-வது குகையிலிருந்து 21-வது குகை வரை காலை 9 மணியிலிருந்து 11மணி, 20-வது  குகையிலிருந்து 7-வது குகை வரை-காலை 11மணியிலிருந்து மாலை 3 மணி, மற்ற 6 குகைகளை மாலை 5மணி வரை பார்ப்பதற்க்கு தயாராகுதல் உத்தமம்.போன பதிவில் சொன்ன மாதிரி சூரியனின் சஞ்சாரத்திற்கு தகுந்த மாதிரி குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தயாராக முடியவில்லை என்றாலும் எல்லா குகைகளிலும் "Sober fibreoptic lighting" (இங்கு sober-என்பதற்கு thoughtful & gentle என்றே பொருள் கொள்ள வேண்டும்) வசதிகள் செய்யப் பட்டுள்ளன.இந்த வசதிகளைப் பார்த்தபோதுதான் நான் என்னுடைய முதல் பதிவில் Don Brown-ன் Anjels&Demons புதினத்தில், வாட்டிகன் நகரின் தொன்மையான நூலகத்தில் Robert Langdon சிவப்பு ஒளியில் தேடுவதை குறிப்பிட்டு இருந்தேன்.அஜந்தா குகைகளில் பச்சை நிற ஒளிர்வுகள் உபயோகிக்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சிவப்பு&பச்சை ஒளிர்வுகள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? மேலும் Robert Langdon என்ன தேடினார்? என்ற இரு கேள்விகளுக்கும் இந்த பின்னூட்டத்தில் பதிலளிப்பவர்களுக்கு, நான் இன்னும் வெளியிடாத புகைப் படங்களை தொகுத்து DVD-ஆக, உங்களை வந்தடையுமாறு செய்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனால், சூரிய ஒளியில் அந்த ஓவியங்களை பார்த்தல் வெவ்வேறு கால கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.நீங்கள் மூர்ச்சை அடையாமல் இருக்க புத்தம், சரணம், கச்சாமி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பார்த்ததை நினைவில் கொள்ள ஹயக்ரீவ மந்திரம் உசிதமானது.

குகைகளில் சூரிய ஒளி பற்றி சொல்லும்போது, 1986-ல் நான் சித்தன்ன வாசல்,ஓவியங்கள், ஏழடிப் பட்டம் ஆகியவற்றை முதன் முதலாக தரிசித்தபோது,சித்தர்கள்(இங்கு ஜைனர்கள்)சூரிய வெளிச்சத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதில் மிகுந்த சிரத்தை கொண்டவர்கள் என்று கேள்விப் பட்டதாக நினைவு. அஜந்தா புத்த பிஷூக்கள் இம்மாதிரி, தேவையான நேரத்திற்கு மட்டும் சூரிய ஒளி உள் வருமாறு அமைத்திருப்பார்களோ என்பது என் உள்ளுணர்வு.சில குகைகளில் சாளரம் நுழைவு வாசலின் மேல் சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.சில குகைகளில் பக்க வாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.அம்மாதிரியான இடங்களில், மற்ற குகைகளில் வெளிச்சம் தேவையில்லாமல் நுழைய முடியாது, மிக சாமர்த்தியமாக அமைக்கப்பட்டுள்ளது>

குகைகள் தியானம் செய்வதற்கும், பாடம் படிப்பதற்கும், வசிப்பதற்கும்,Auditorium போன்ற வசதியுள்ள(Auditorium குகைக்கு தனியாக ஒரு பதிவு எழுதலாம்)உறங்குவதற்கும் ஆக, 30 குகைகளும் ரக வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.(அந்த காலத்திலேயே, எப்பிடி,எப்பிடி-1900 வருடங்களுக்கு முன்னாலேயே)
                                           
                                                                                        .....மீதி 8-ம் பதிவில்
------------------------------------------------------------------------------------------------------------
நாம் பார்க்கச் செல்லும் குகைகளை அடைவதற்கு முன்னரே களைப்பு அடைந்து விடும்படியான தூரம், சிரமமான வழிதத்தடம். வியர்வை உறுஞ்சுவதற்கு தோதாக எளிதான உடை, எளிதில் கழட்டும்படியான, மெலிதான காலணிகள் மிகவும் அவசியம்.சுமார் 20 குகைகளில் காலணிகளை வெளியே விட்டுதான் செல்லவேண்டும்.Fast Food வகைகள் கையில் வைத்துக் கொள்வது நலம். குகைகளில் கிடைக்கும் குடிதண்ணீர் மிகவும் சுவையாக இருந்தாலும், ஒரு சிறிய வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்வது நலம்.சிங்க வால் குரங்குகள் ஏராளம்!
------------------------------------------------------------------------------------------------------------












No comments:

Post a Comment