Wednesday 6 August 2014

Ajantha--9
---------------
எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து,-நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிஷூக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை.அதாவது சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணை பார்த்ததில்லை. ஆனால் ஜீவனுள்ள பெண்களை பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன்.மானிட குலங்களுக்கு எட்டா தெய்வீக சௌந்தர்யம் வாய்ந்த மடமங்கயர்களைப் பார்த்திருக்கிறேன்.அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அனங்குகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையை கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்திருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ்போல் வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும், இன்பமும்உண்டாயின=====

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் அனைத்தும் கல்கி, "சிவகாமியின் சபதத்தில்" நாகநந்தி பிஷூ தன் சகோதரன் புலிகேசியிடம் கூறுவது போல் அமைந்த உரையாடல்!

இவைகளை வெகு காலம் முன் படித்தும், சமீபத்தில் Bombay Kannan Kannan  ஒலி புத்தகத்தில் கேட்டும்,நான் என்னுடைய கற்பனையில் ஸ்தாபித்திருந்த அஜந்தா குகை ஓவியங்களை நேரில் கண்டபோது இன்னும் பல அரிய தகவல்களை அறிய முடிந்தது, ஆனந்தம், பேரானந்தம்!

அடுத்த பதிவில் ஓவியங்களுக்கான களமும், சாகாவரம் பெற்ற வர்ணங்களையும்  பற்றி......





No comments:

Post a Comment