Wednesday 6 August 2014

Ajantha--6

சிறிது மூச்சு வாங்கிக் கொண்டே,

ஆமாம், நாம் வடக்கு நோக்கி நடந்து இருக்கிறோம், அப்படி என்றால் மேற்கு திசை கடந்து, வடக்கு, மீண்டும் கிழக்கு திசை முழுவதுமாக கடக்கப்போகிறோம், அதாவது அஜந்தா குகைகள் குதிரையின் குளம்பு வடிவில் அமைக்கப் பட்டிருகின்றன.

அப்படியா? நீங்கள் ஏன் பின்னாலேயே வருகிறீர்கள்?

அவர்களிடம் நான் சொல்லாதது,
சில சமயங்களில் நாம் வேகமாக உத்வேகத்துடன்,முன்னேறி நடக்கும் போது, இல்லை அப்பா! எங்களால் நடக்க முடியவில்லை, ஏற முடியவில்லை! என்று புலம்புவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு பின்னால் நடக்கும்போது, பரவாயில்லை! அப்பாவே முடியாமல் நடக்கும் போது நாம் தொந்திரவு கொடுக்க கூடாது என்று அவர்கள் உற்சாகமாக முன்னேறும் முகாந்திரங்கள் அதிகம் உண்டு.

பெரும்பாலும் நாம் போயிருப்பது ஒரு Pleasure Trip என்ற மனோநிலையில், சிரமமான வழிகளை நாம் தவிர்க்கும் நிலையில், சிறிய தடை கூட மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் நாம் மனதளவில் தயார் நிலையில் இருக்கும் போது உடல் உபாதைகளையும்  மிக எளிதாக கடந்துவிடலாம்.

ஏன் ஜீ! இந்த சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் மிகவும் மதிப்பு கூடியது, பழமையானது என்று சொல்கிறார்களே, நம்மால் அதை சரியாக உணர்ந்து கொள்ள முடியுமா?இவ்வளவு சிரமங்களுக்கு Justification கிடைக்குமா?

கண்டிப்பாக!

ஆனந்தம் அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது!உணருவதில் அல்ல--
                                                                               பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர்.

(நான் எடுத்த புகைப் படங்கள் எல்லாவற்றையும் ஆல்பமாக இந்த 'தொடர் எழுத்து' முடிந்தவுடன் வெளியிடுகிறேன். நிறைய வித்யாசம் இருக்கும், ஓவியங்களின் வயது,சரியான கோணங்களை எடுக்க முடியாத மாதிரியான கட்டுப்பாடுகள்,பிளாஷ் உபயோகப் படுத்தாமல் எடுப்பதும் மிகுந்த வேறுபாட்டை  உருவாக்குகிறது)



No comments:

Post a Comment