Wednesday 6 August 2014

Ajantha--5
----------------
பர்தாப்பூர் (Fardapur) T-ஜங்ஷன்க்குப் பிறகு நம்முடைய வண்டிகளை நிறுத்த சொல்லி  MTDC -AC பஸ்களில் நம்மை 5KM தொலைவில் உள்ள அஜந்தா வில்லேஜ்-ல் கொண்டு போய் விடுகின்றனர். தினமும் காலை 9 மணி to 5:30மணி வரை சுற்றி பார்க்க முடியும், முடியாவிட்டால் யாரும் அந்த அஜந்தா குகைகளில் இருக்க முடியாது, வந்துவிட்டு அடுத்த நாள்தான் சென்று பார்க்க முடியும்.Ajantha Caves-ல் அருமையான MTDC உணவகம் இயங்குகிறது.இருந்தாலும் கையில் போதுமான அளவுக்கு உணவு, தண்ணீர் வைத்துக் கொள்வது மிக மிக நல்லது.குகை ஒரு 4 அல்லது 5KM விஸ்தீரனத்திற்கு பரவி உள்ளது ஆகையால் திரும்ப வந்து செல்வது என்பது இயலாது. டோலி வசதி இருக்கிறது.நாம் குகைகளுக்கு செல்ல இன்னொமொரு இரண்டு பதிவுகள் ஆகலாம்!---------மற்றவை பிறகு,

எப்போதும் போல் விஜி, வருண் முன்னால் செல்ல, நான் பின் தொடருகிறேன், இதில் இணைக்கப்பட்டுள்ள புகைப் படங்கள் மீதி விஷயங்களை சொல்லிவிடும் என நினைக்கிறேன்.

இருவரும் என் கண் பார்வையிலேயே  இருந்தாலும் என் நினைவுகள் நாகநந்தி பிஷூவும், புலிகேசி சக்கரவர்த்தி பேசிக் கொள்ளும் பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது..........

வாதாபிச் சக்கரவர்த்தி நாகநந்தியிடம் கீழ் வருமாறு சொல்கிறார்!
அண்ணா! நீ சொல்லி இருந்தபடியே நான் நதி வழியை பிடித்துக் கொண்டு போனேன்.வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும் மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை நின்று அப்பால் வழி இல்லையென்று தோன்றியது. போகப்போக இப்படியே இருந்தது.ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த் தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியை பிடித்துக் கொண்டு போகிறேனோ என்று எண்ணினேன். அதைவிட பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது. நீ ஒருவேளை என்னை ஏமாற்றிவிட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம் போய் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கின்றாயோ என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திர குகைகளை அடைந்தேன்.

விஜியின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன்!

2000 வருடங்களுக்குப் பிறகும் வாதாபிச் சக்கரவர்த்தி விவரித்ததில், நாம் அந்த வழிகளில் கடுகளவும் மாற்றமில்லாததை உணர முடிகிறது!

(கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் எழுதும்போது எல்லா இடங்களுக்கும் சென்று வந்ததாக குறிப்புகள் இருகின்றது. குறைந்த பட்சம் இது கல்கி அவர்கள் அஜந்தாவை தரிசித்த பிறகு எழுதியதாக தான் இருக்க வேண்டும், அதாவது வாதாபிச் சக்கரவர்த்திகளின் குரலின் மூலமாக சொல்லும் செய்திகள்)

என்ன ஜீ ? நாம் 28-ம் எண்ணுள்ள குகைக்கு வந்து விட்டோம்! மற்றவர்கள் எல்லாம் அந்த பாதையில் செல்கிறார்கள் என்ற போதும், பரவாயில்லை என்று சொன்னீர்களே? தவறாக ஆரம்பிக்கிறோமோ?  

இல்லை இல்லை! காரணம் இருக்கிறது.............................அடுத்த பதிவில்,






No comments:

Post a Comment