Wednesday 4 December 2013

04.08.2013

இன்றுஞாயிற்றுக்கிழமைகாலை 11மணிக்கு நெல்லை கண்ணனின் "தமிழ்பேச்சுஎங்கள்மூச்சு" பார்த்த .முடித்த  பின் செய்தித் தாளில் மூழ்கி  எதேச்சையாக நிமிர்ந்தபோது- கேடி பாய்ஸ், கில்லாடி Girls,( தலைப்பே பயமுறுத்துகிறது ! ) விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகி இருந்தது. சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டி?, யாழினி என்ற சிறு பெண் (12 வயது ?) பாடுவதற்கு அழைக்கப்படுகிறாள்,

யாழினி மேடைக்கு வருவதற்கு முன், Bar போன்ற ஒரு சிறு மேஜையில் உள்ள காலி மதுக் கிண்ணத்தை எடுத்து சிப் பண்ணிவிட்டு " எந்தன் கண்ணில் எழுலுலகங்கள் வாராய் கண்ணா! என்ற பாட ஆரம்பிக்கிறார். எனக்கு புரிகிறது செட்டில் பாடும்போது போதையில் பாடும் ஒரு scene -ஐ portray பண்ணுகிறார்கள் என்று.

யாழினி-க்கு இன்னும் வயதிருக்கிறது மது-வை எப்படி அணுகுவது என்று! இது போதாமல் நான் மிக விரும்பும் Mr. Vijay Prakash தன்னுடைய Judgement -ஐ மது அருந்தியவர் போல உளறியவாரே சொல்லுகிறார், இருவருக்கும் பலத்த கரகோஷம், இதற்குப் பின் உச்சகட்டமாக இசையில் எல்லாம் சாதித்து முடித்த சுசித்ரா, யாழினியை திரும்பவும் பாடசொல்லி உற்சாகப்படுத்தி, விஜய் பிரகாஷ்,Voice Expert ஆனந்த் இருவரையும் மேடைக்கு கூட்டிசென்று ஆளுக்கொரு காலி மதுக்கிணத்துடன் தீர்த்தவாரி செய்து  ஆடி முடிக்கிறார்கள். எனக்கு இப்பொழுது கூட நம்பமுடியவில்லை நான் பார்த்தது உண்மைதானா என்று!

ஊடகத்தில் என்ன சொல்ல வருகிறார்கள்? நமக்கெல்லாம் nativity-ஐ பற்றி ஒன்றும் தெரியாது என்றா? ஒரு corporate media எப்படி இந்த சிறுவர்களை வைத்துக்கொண்டே  சூப்பர் சிங்கர் முடிந்தபின் எந்த ஒரு சிரமும் இல்லாமல் ஒரு ப்ரோக்ராம் நடத்தமுடிகிறது?, நம் நேரத்தையும் உணர்வுகளையும் எப்படியெல்லாம் சேதப்படுத்துகிறார்கள்.

எல்லா Judge-களும் ஸ்ருதி, பாவனை,performance என்பதை தாண்டுவதேயில்லை.இந்த போட்டியாளர்களின் பெற்றோர்களும் MBBS, Engineering-க்குப் பிறகு தங்கள் பிள்ளைகள் எக்கேடு கெட்டாலும் இந்த தளத்தில் தான்  இதை எல்லாம் தாண்டி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்!

எப்படியும் இந்த program- ஐ ஒரு 20 நாட்களுக்கு முன்னராவது  ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். Vijay டிவி-ல் ஒருவருக்கு கூட இதை மீள் பதிவில் பார்க்கும்போது நெருடலாகத் தோன்றவில்லையா? Internal Sensor board  கிடையாதா? மீடியாவிற்கு ஒரு பொது மனிதனின் ஆசாபாசங்களை தொடுவதுதான் வெற்றி இலக்கு, அதற்காக இப்படியா? காக்கை எருமையின் புண்ணைத் தோண்டுவதுபோல!

ஏற்கெனவே நான் NDTV, TIMES NOW, HEADLINES TODAY & CNN-IBN-ல் இருந்து ஓடி வந்துவிட்டேன். இனிமேல் TV பார்க்கப் போவதில்லை!

No comments:

Post a Comment