Wednesday 4 December 2013

27.09.2013

அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு.
என்ன ஸ்ரீ இவ்வளவு காலையிலேயே!
இல்லை sir, நான் நள்ளிரவு 2 மணிக்கே கூப்பிடவேண்டியது,
சொல்லு ஸ்ரீதர் என்னாச்சு?
sir, KVP. ஸ்ரீனிவாசன் போயிட்டான் sir!
சிறிது நேரம் ஆயிற்று , நான் என்னுடைய சுயநிலைக்கு வருவதற்கு.
sir, நினைவிருக்கிறதா? நாங்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன் ஒரே நாளில் தான் உங்களுக்கு ரிப்போர்ட் செய்தோம்.
ஆமாம் ஸ்ரீ. ஞாபகம் இருக்கிறது!
ஸ்ரீதர், நான் ஒரு 6 மணிக்கு ரெடியாக இருக்கிறேன். மற்றவர்களிடமும் சொல்லிவிடு!எல்லோரையும் PICK-UP செய்து கொள்ளலாம்.

ஸ்ரீதர் வரும்வரை KVPS-ன் நினைவுதான்.

 KVPS-க்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஹோசூர் வரை Juristiction. நான் KVPS -ஐ அழைத்துக்கொண்டு Launch செய்ய Slide Projector, Product samples, ஒரு வாரத்திற்கான மற்ற ஆயத்தங்களுடன் இட்டாண்டஹள்ளி, ஜிட்டாண்டஹள்ளி எல்லாம் தாண்டி காலை ஹோசூர் போய் நள்ளிரவு கிருஷ்ணகிரி வந்து அத்தனை சுமைகளுடனும் ரூம் போட்டாயிற்று.
அடுத்தநாள் காலை முதல் Appointment-லேயே projector சொதப்ப, அதை மூடவே முடியாத மாதிரிக்கு  KVPS கையில் ஏந்திக்கொள்ள lodge-க்கு ஊர்வலம் கிளம்பினோம்.

இடையில், நான் ஸ்ரீனி நீ  lodge-க்கு போய் பில்  செட்டில் செய்து ரெடியாகு, நான் சின்ன தலைவரிடம் Trunk call புக் பண்ணி சொல்லிவிட்டு,  வேறு  Projector-ஐ
சேலத்தில் கொண்டுவந்து  கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கிருபாச்சாரியர்.வீரராகவன்-ஐ லைனில் பிடித்தால்
சுந்தர்!வெற்றி செய்தி எதாவது இருந்தால் சீக்கிரம்  சொல்லு! இங்கே எனக்கு சூட்டில்  கொப்புளம் வந்துவிடும் போலிருக்கிறது என்றார். அப்புறம் இங்கே நடந்தவற்றை சொல்லி குளிரப்பண்ணி, அன்றிரவே ஹரி-ஐ சேலம் old Railway ஸ்டேஷன் அருகே எங்களுடைய ஆஸ்தான Raj Bhavan-ல் சென்னயிலிருந்து Projector-ஐ கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடு செய்து ரூமிற்கு திரும்பினால்   KVPS லாட்ஜ் வாசலில் Projector-ன் மேல் ஒரு வேஷ்டியை போட்டு மூடி ஏதோ போல்  ஏந்திக் கொண்டிருந்தான். என்னடா ஸ்ரீனி என்று கேட்டால், இல்லை அப்படியே கொண்டுபோனால் TTS வேலை தீர்த்துவிடுவார் என்று சொல்ல இருவரும் சேலம் திரும்பிவந்தது மாவீரன்.அலெக்ஸாண்டர் பாபிலோன் வந்ததற்கு இணையானது.

பிறகு மற்றொரு  Projector-டன் கிருஷ்ணகிரி சென்று பேருந்து நிலையத்தின் அழகை கண்டு கழித்து, காலையில் இட்லி, தோசை கிடைக்காமல் பரோட்டா-விற்கு பால் ஊற்றி சாப்பிட்டு, அடுத்த முறை வரும்போது கேனில் தண்ணீர் கொண்டுவரவேண்டும் என்று சங்கல்பத்தை எடுத்துக்கொண்டதும், மறுபடியும்  Projector-ன் built-in screen ரிப்பேராக அதே வேஷ்டியை திரை சீலையாக மாற்றி 15 நாட்களுக்கு ஒப்பேற்றி பிறகு சேலம் திரும்பியது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை.

எனக்கு சென்னை உயர்பதவிக்காக மாற்றம் கிடைத்தவுடன் KVPS தன் சேலம் வேலையை விட்டு விட்டு  எங்கோ போய்விட்டான். இரண்டு, மூன்று மாதம்  கழித்து ஒரு நாள் மதியம் ரிஷப்ஷனிஸ்ட் ராஜி,  sir,உங்களுக்கு போன் என்றவுடன் KVPS எதிர்முனையில், ஸ்ரீனி எங்கடா போயிட்ட? என்றால், இல்லை sir, எனக்கு எல்லோரிடமும் வேலை பார்க்க முடியாது என்றான்.

மறுபடியும் ஒரு இரண்டு ஆண்டு கழித்து இரவு வேலை முடிந்து வீடு திரும்பினால் KVPS டிபன் சாப்பிட்டு கொண்டிருக்க, என் இல்லத்தரசி KVPS மறுபடியும் வந்துவிட்டார் என்றாள்! பிறகு கிளம்பும்போது ஸ்ரீனி பணம் ஏதும் வேண்டுமாடா? என்றால் வேலை வாங்கிக் கொடுங்கள் என்றான். துரோனச்சாரியார் பால்கிஷன் சாரிடம் சொல்லி அவருடைய இன்னொரு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்த சில மாதங்களுக்கு பிறகு அங்கிருந்தும் சில மாதங்களில் எங்கோ போய்விட்டான். மிகவும் நல்லவன்,யாருக்கும் தொந்திரவு கொடுக்காத உத்தமமான ஆத்மா.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, ஸ்ரீதர் காரோடு வெளியே நின்று கொண்டிருந்தான். sir, KVPS 2 மணிக்கு மாரடைப்பால் காலமாயிட்டான் என்று சொல்ல, நான் "நல்லவனுக்கு அழகு சொல்லாமல், கொள்ளாமல் போவது"  என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தேன்.

இம்முறை KVPS எங்கு போயிருக்கிறான் என்று தெரியும்!

No comments:

Post a Comment