Wednesday 4 December 2013

11.08.2013

2 அதிசயம் ஆனால் உண்மை!
எனது மகன் இந்த பருவத்திற்கே உடைய வேகமும் விருப்பங்களும் உடையவன்! புத்தகங்கள் என்றால் Clive Cussler, Dan Brown, Restaurant என்றால் New Yarker, Don Pepe, மியூசிக் என்றால் Back Street Boys, Taylor Swift, டிவி நிகழ்ச்சிகள்  என்றால் Bare Grills, Les Straud,CQB கல்லூரி போக மற்ற நேரங்களில் CART ATTACK-ல் ரேஸ் கார் ஒத்திகை!

என் தந்தை என்னிடம் மெதுவாகப் பொருமுவார், ஏம்பா! இவன் நார்மலாகவே இல்லை! மேலும் நம் தாய்மொழி தமிழில் இவன் எதுவும் செய்வதில்லை என்று . அதற்கு நான் சப்பைக்கட்டு கட்டுவேன், வெய்ட் பண்ணலாம்பா! எல்லாம் மாறிவிடும்.

அதிசயம் No.1.  கடந்த சில தினங்களாக Bombay Kannan-ன் ஒலிச் சித்திரமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" கேட்க ஆரம்பித்திருக்கிறான்.வீட்டில் பொன்னியின் செல்வன் சம்பந்தமாக கலந்துரையாடல், அவனுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்வது என்று என் மனைவியும் பிஸியாக இருக்கிறாள்.பொன்னியின் செல்வன் புத்தகங்களையும் படிக்க  எடுத்து வைத்துள்ளான்.

இந்தப் புஸ்தகத்தை விலை கொடுத்து வாங்கி நூல் நிலையங்களுக்குத் தந்தால் சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்தவாறு ஆகும். லட்சுமிதேவிக்கு நேரில் பூஜை செய்வதில் பயனில்லை. சரஸ்வதியைத் திருப்தி செய்தால் லட்சுமி தேவியின் மனம் உருகும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிவாக்கு-நிச்சயம் பொய்க்காது!

அதிசயம் No.2. கடந்த மாதம் இவன் தன்னுடைய ஆப்ரிக்க தமிழ் நண்பனுடன் ஈஷா யோகா நிலையத்துக்குச் சென்று 3 நாள் "சத்குருவுடன் யோகா" நிகழ்ச்சியில் கலந்து திரும்பினான்! வந்தவுடன் ஒரே புலம்பல், என்ன டாடி, வெறும் சாம்பார் சாதம், பழங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள், தயிர் சாதம் தரவேயில்லை! ஆனால் அவனே சற்று நேரம் கழித்து சொன்னான்-அமைதியாக இருப்பதற்கு கற்று கொண்டேன்!

உடனே எனக்கு Actor சரண்யா-வின் புகழ் பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது. எனக்கும் மகிழ்ச்சி! யானை வந்தால் ஏறிக்கொள்ள, சப்பாணி வந்தால் தவழ்ந்து கொள்ள, வாழ்க்கையின் நிதர்சனத்தை என் மகனும்  புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான் என்று.

No comments:

Post a Comment