30.11.2013
05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.
குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.
இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.
முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,
Suswagatham Sir!
kya Munache Ranabir?
குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு! பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.
என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.
அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.
எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.
காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில் ஏறிக்கொண்டான்.
ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!
இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,
ரணபீர்! அது வேறு காலம்!
05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.
குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.
இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.
முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,
Suswagatham Sir!
kya Munache Ranabir?
குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு! பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.
என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.
அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.
எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.
காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில் ஏறிக்கொண்டான்.
ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!
இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,
ரணபீர்! அது வேறு காலம்!
No comments:
Post a Comment